நடந்தது என்ன? சவூதி அரேபியாவின் உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின்படி, இன்று (திங்கள்) மதீனா அருகே உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டீசல் டேங்கருடன் மோதியதில் 42 பேர் கருகி உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுபற்றி பேசிய ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசி, “மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற 42 ஹஜ் யாத்ரீகர்கள் தீப்பிடித்து எரிந்த பேருந்தில் இருந்தனர். ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் துணைத் தலைவர் அபு மதன் ஜார்ஜிடம் பேசினேன். இந்த விஷயம் குறித்த தகவல்களை அவர்கள் சேகரித்து வருவதாக அவர் எனக்கு உறுதியளித்தார். ஹைதராபாத்தை சேர்ந்த இரண்டு பயண நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, பயணிகளின் விவரங்களை சேகரித்து, ரியாத் தூதரகம் மற்றும் வெளியுறவுச் செயலாளருடன் பகிர்ந்து கொண்டேன்

