எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தார் நன்கொடையாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இவர்களது ஆண்டு நன்கொடை ரூ.2,708 கோடியாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்காவது முறையாக அதிகம் நன்கொடை கொடுத்தவர்களது பட்டியலில் ஷிவ் நாடாரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.626 கோடியை தொண்டுப் பணிகளுக்காக செலவிட்டுள்ளது. இது, கடந்தாண்டை விட 54 சதவீதம் அதிகம். பஜாஜ் குடும்பம் ரூ.446 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது, கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 27 சதவீதம் அதிகமாகும். தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது குடும்பத்தார் நன்கொடை பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர். இவர்கள் ரூ.440 கோடியை சுகாதார மற்றும் சமூகப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர். இது, கடந்தாண்டை விட 32 சதவீதம் அதிகமாகும்.

