தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர். விழாவையொட்டி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானை அம்மனுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு ஆகியோரிடம் காப்பு கட்டிய சோமாஸ் கந்தர் பட்டர் தாம்பூலம் பெற்று, யாகசாலை பூஜையை தொடங்கினார். பின்னர், விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, ஹோம பூஜைகள் நடைபெற்றன.

