உயிரிழந்த 45 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ராம் நகரைச் சேர்ந்த இந்த குடும்பத்தினர் உம்ரா புனிதப் பயணத்தை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்று விட்டு அங்கிருந்து மதினா சென்றுள்ளனர். கடந்த 8 நாட்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற அவர்கள், வரும் சனிக்கிழமை மீண்டும் தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்ததாக அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். உயிரிழந்தவர்களில் 9 பெரியவகள், 9 குழந்தைகள் இருந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த மற்றவர்கள் ஹைதராபாத் மல்லேபல்லி, பஜார் காட், ஆசிஃப் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மதினாவுக்கு 25 கி.மீ முன்னதாக இவர்கள் சென்ற பேருந்து, எதிரே வந்த டீசல் டேங்கர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது நடந்த இந்த விபத்தில், பேருந்து முழுவதும் உடனடியாக தீப்பிடித்து எரிந்தது.

