
சென்னை: ‘ஆடை வடிவமைப்பில் ஜொலிக்க படைப்பாற்றலும் புதுமையும் வேண்டும்’ என்று கைத்தறி துறை செயலர் வி.அமுதவல்லி தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிஃப்ட்) 14-வது பட்டமளிப்பு விழா அந்நிறுவனத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக அரசின் கைத்தறி, துணி நூல், கைவினைப் பொருள், ஜவுளி மற்றும் காதி துறையின் செயலர் அமுதவல்லி கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், விருதுகள் மற்றும் பட்டங்களை வழங்கினார். பேஷன் டெக்னாலஜி இளநிலை படிப்பில் 250 பேர், முதுநிலை படிப்பில் 34 பேர் என மொத்தம் 284 பேர் பட்டம் பெற்றனர்.

