10 பேர் சிறுவர்கள்: அப்போது, அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். டீசல் டேங்கர் மோதியதால், பேருந்து முழுவதும் உடனடியாக தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்து வெளியே வர அவர்கள் முயற்சித்தும் பலனில்லை. இந்த கோர விபத்தில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் என 45 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அப்துல் ஷோயப் என்பவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
உள்ளூர் மக்கள் முயற்சி: பேருந்தில் இருந்த தீயை உள்ளூர் மக்கள் அணைக்க முயன்றுள்ளனர். அதன்பின்னர், தீயணைப்பு படையினர், போலீஸார் விரைந்து சென்று தீயை அணைத்தனர். 45 பேர் உயிரிழந்துள்ள விவரத்தை ஹஜ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஹைதராபாத் பஜார் காட் பகுதியை சேர்ந்த 18 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உயிரிழந்தவர்களில் ஒருவர் மட்டும் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். மற்ற 44 பேரும் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர்கள். மெக்காவில் தங்கிய 4 பேரும், பேருந்தில் இடம் இல்லாததால் இவர்களுக்கு முன்பு காரில் சென்ற 4 பேரும் உயிர் தப்பினர். சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

