
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘ஆர்ஆர்ஆர்’ வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், ராஜமவுலி. மகேஷ் பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாக ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறியிருந்தார். இதற்கிடையே பிரியங்கா சோப்ரா மந்தாகினி என்ற கதாபாத்திரத்திலும் பிருத்வி ராஜ், கும்பா என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

