சென்னை: சேர்க்கையை ரத்து செய்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திருப்பித் தராத, உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு: கல்லூரிகளில் சேர்ந்து குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சேர்க்கையை ரத்து செய்து விட்ட மாணவர்களுக்கு உரிய விதிகளின்படி அவர்கள் செலுத்திய கட்டணங்களை திருப்பித் தர வேண்டும். இதற்காக யுஜிசியால் 2018-ல் வெளியிடப்பட்ட கொள்கை, கடந்த கல்வியாண்டுடன் காலாவதியாகிவிட்டது.

