
புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அதிகார வட்டாரங்கள் கூறியதாவது:
டெல்லி குண்டுவெடிப்புக்காக நேபாளத்தில் இருந்து ஏழு பழைய செல்போன்களை சதிகாரர்கள் வாங்கியுள்ளனர். மேலும் 17 சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 6 சிம் கார்டுகளை உ.பி.யின் கான்பூரில் வாங்கியுள்ளனர்.

