Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, October 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»நவீன ஒளிப்பதிவை வடிவமைத்த ஒளியின் சக்தி | ஒளி என்பது வெளிச்சமல்ல
    சினிமா

    நவீன ஒளிப்பதிவை வடிவமைத்த ஒளியின் சக்தி | ஒளி என்பது வெளிச்சமல்ல

    adminBy adminOctober 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நவீன ஒளிப்பதிவை வடிவமைத்த ஒளியின் சக்தி | ஒளி என்பது வெளிச்சமல்ல
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திரைப்பட ஒளிப்பதிவாளரும் எழுத்தாளருமான சி.ஜெ.ராஜ்குமார், ஒளிப்பதிவு துறையில் 13 நூல்களையும், 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். நவீன ஒளிப்பதிவின் தொழில்நுட்பங்கள், கலை மற்றும் திரைப்படத்துறையைப் பற்றிய இவருடைய எழுத்துகள், உலகளாவிய அளவில் சினிமா மாணவர்களுக்கும் தொழில்முனைவர்களுக்கும் வழிகாட்டியாக உள்ளன. தற்போது, சினிமா ஃபாக்டரி அகாடமியின் டீனாக பணியாற்றி வருகிறார்.

    ஒளி என்​பது சினி​மா​வின் ஆன்​மா. அது வெறும் வெளிச்​சமல்ல; அது கதை சொல்​லும் மொழி. ஒளி எப்​படிப் பயன்​படுத்​தப்​படு​கிறது என்​பதே ஒளிப்​ப​தி​வின் பரிணா​மப் பயண​மாக மாறி, உணர்ச்​சி, அர்த்​தம் மற்​றும் மாயையை உரு​வாக்​கு​கிறது. இந்​தப் பயணத்​தின் மறக்க முடி​யாத உதா​ரணம், குரு தத் இயக்​கிய ‘காகஸ் கே பூல்’ (1959). ஒளிப்​ப​தி​வாளர் வி.கே.​மூர்த்தி இருண்ட படப்​பிடிப்பு தளத்​தில் ஒரே ஒரு திட​மான ஒளிக்​க​திரைப் பயன்​படுத்தி சினிமா வரலாற்​றில் எப்​போதும் நிலைத்​திருக்​கும், காட்​சியை உரு​வாக்​கி​னார். வெறுமை​யான ஸ்டூடியோ​வில் குரு தத் தனி​யாக அமர்ந்​திருக்​கும் அந்த ஒளிக்​க​திர் தனிமை, அழிந்​து​போகும் புகழ், கலைத் தேடல் ஆகிய​வற்​றைச் சின்​ன​மாக வெளிப்படுத்​தி​யது.

    ஒரு ஒளிக்​க​திர், உணர்ச்​சி​யைப் பேச வைக்​கும் சக்​தி​யை, இந்​தக் காட்சி நிரூபித்​தது. அந்த காலத்​திலேயே சத்​யஜித் ரே படங்​களில் சுப்​ரதா மித்ரா, உலகுக்கு ‘பவுன்​ஸ்ட் லைட்​டிங்’ என்ற புதிய பார்​வையை அறி​முகப் படுத்​தி​னார். நேரடி​யாக ஒளி வீசாமல் பிர​திபலிப்​பைப் பயன்​படுத்தி மென்​மை​யான ஒளியை உரு​வாக்​கும் அவருடைய முறை, இயற்கை ஒளி​யின் உண்​மை​யான உணர்​வை, கேமரா முன் கொண்டு வந்​தது. இது உலக ஒளிப்​ப​தி​வின் மொழியையே மாற்​றிய முக்​கிய​மான புது​மை.

    அஞ்சலி படத்தில்…

    இதை விட வேறு​பட்ட, ஆனால் சமமான தாக்​கத்தை ஏற்​படுத்​தி​ய​வர் பாலு மகேந்​தி​ரா. அவர் சாளரங்​கள் வழி​யாக வரும் இயற்கை ஒளியை உள் தளங்​களில் அழகாகப் பயன்​படுத்தி இந்​திய ஒளிப்​ப​திவை மாற்​றி​னார். ‘மூன்​றாம் பிறை’ போன்ற படங்​களில் சாளர ஒளி கதா​பாத்​திரங்​களின் உள்​ளுணர்வை வெளிப்​படுத்​துகிறது. இயற்கை வெளிச்​ச​மும் கவிதை​போல் மென்​மை​யாக​வும் நெருக்​க​மாக​வும் இருக்க முடி​யும் என்​பதை அவர் நிரூபித்​தார்.பாலுமகேந்​திரா சூரிய ஒளி​யின் கவிஞர் எனில் மாருதி ராவ், சந்​திர ஒளி​யின் மாய​வா​தி.

    அவரது இரவுக் காட்​சிகள் இருளை​யும் கவிதை​யாக்​கின. சந்​திர ஒளி வெறும் நீல நிறப் பின்​னணி​யாக இல்​லாமல் அடுக்​கு​கள், ஆழம், கனவுத் தன்மை கொண்ட காட்​சிமொழி​யாக மாறியது. பிறகு வந்​தார் பி.சி.ஸ்ரீராம். பாரம்​பரிய ஒளி அமைப்​பின் விதி​களை முறியடித்​து, எதிர்​பா​ராத பின்​னொளி, உள்​தளங்​களுக்கு ஊடுரு​வும் ஒளி மற்​றும் ‘ஃப்​ளேர்’ களை கதை​யின் ஓட்​ட​மாக மாற்றி​னார்.

    வி.கே.​மூர்த்தி, மது அம்​பாட், பாலு மகேந்​தி​ரா, பி.சி.ஸ்ரீ​ராம்

    வெளிச்​சத்தை அவர், ஒரு கலகக்​கார மொழி​யாக மாற்​றி, காட்​சிகளுக்கு உயிரூட்​டி​னார். மது அம்​பாட்​டின் ‘அஞ்​சலி’ அதற்​குச் சிறந்த உதா​ரணம். “ஒளி பின்​னணி​யில்உரு​வான தேவதை” எனக் கூறப்​படும் அந்​தக் குழந்தை பாத்​திரம், லோ கீ லைட்​டிங்​கில் உரு​வானது. மென்​மை​யான ஒளி, நிழல்​கள் மற்​றும் பின்​புலத்​தின் அமை​தி​யுடன் அந்​தக் கதா​பாத்​திரம் நம் நினை​வில் நிலைத்து விடு​கிறது.

    இந்த ஒளி மாந்​தர்​கள், ஒளி என்​பது வெறும் தொழில்​நுட்​பத் தேவை அல்ல, அது கதா​பாத்​திரம், உணர்ச்சி மற்​றும் சூழல் என சினி​மாவை வடிவ​மைக்​கும் சக்தி என்​பதை நமக்கு நினை​வூட்​டு​கிறார்​கள். ஒளி மூலம் உண்மை நிலை​யைப் பதிவு செய்​வதற்​காக அல்ல, அதை வடிவ​மைத்து கவிதை​யாக்​கு​வதற்​காகவே ஒளிப்​ப​தி​வாளர் செயற்​படு​கிறார். கலைஞர்​களின் கைகளில் ஒளி, வெறும் வெளிச்​சமல்​ல ; அது சினி​மா​வாக மாறுகிறது.

    (புதன்​ தோறும்​ ஒளி ​காட்​டுவோம்​)



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ’காந்தாரா: சாப்டர் 1’ படத்தை பாராட்டியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்

    October 8, 2025
    சினிமா

    வடலூர் சத்திய ஞான சபையில் நடிகர் சிம்பு வழிபாடு!

    October 8, 2025
    சினிமா

    ‘டீசல்’ படத்துக்காக கடலுக்குள் 40 நாள் ஷூட்டிங்!

    October 8, 2025
    சினிமா

    மலையாள சினிமாவில் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ சாதனை

    October 8, 2025
    சினிமா

    அரசியல் கதையில் நடிக்கிறார் நட்டி

    October 8, 2025
    சினிமா

    வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’

    October 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரயில் முன்பதிவு டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற அனுமதி
    • ’காந்தாரா: சாப்டர் 1’ படத்தை பாராட்டியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்
    • டிஎஸ்​பியை கைது செய்ய உத்​தர​விட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்​மல் அரியலூருக்கு இடமாற்​றம்
    • பிரையன் ஜான்சன் இந்த 3 ஆச்சரியமான பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் நீண்ட ஆயுளுக்கான தனது million 2 மில்லியன் ஆண்டு அணுகுமுறையை வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அரசு தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள்: பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.