Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, October 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிரசாந்த் கிஷோருடன் சிராக் பாஸ்வான் கூட்டணி? – பிஹார் அரசியலில் பரபரப்பு!
    தேசியம்

    பிரசாந்த் கிஷோருடன் சிராக் பாஸ்வான் கூட்டணி? – பிஹார் அரசியலில் பரபரப்பு!

    adminBy adminOctober 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரசாந்த் கிஷோருடன் சிராக் பாஸ்வான் கூட்டணி? – பிஹார் அரசியலில் பரபரப்பு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாட்னா: அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் சிராக் பாஸ்வான் – பிரசாந்த் கிஷோர் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் ‘அரசியலில் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்’ என்று லோக் ஜனசக்தி கட்சி வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளன.

    பிஹாரின் மறைந்த அரசியல் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், அம்மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார். அவர் கடந்த 2020 பிஹார் தேர்தலில் தனித்து களமிறங்கி நிதிஷ் குமார் கட்சிக்கு பெரும் சேதாரத்தை உருவாக்கினார். அதேபோல சமீபத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது அவரின் கட்சி. எனவே லோக் ஜனசக்தி கட்சிக்கு இப்போது மவுசு அதிகரித்திருக்கிறது.

    மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கும், பிஹாரில் ஆளும் ஜேடியு – பாஜக கூட்டணிக்கும் இடையில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 40 இடங்களை பாஸ்வான் கட்சி பெற விரும்புகிறது. ஆனால், பாஜக 25 இடங்களை மட்டுமே ஒதுக்கத் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பாஸ்வான் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில்தான், பாஸ்வான் பிரசாந்த் கிஷோர் தரப்புடனும் பேச்சுவார்த்தைக்கு தூது விட்டுள்ளாராம். பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, பிஹாரில் தனித்துப் போட்டியிடுகிறது. இக்கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு இல்லையெனிலும், கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என சொல்லப்படுகிறது. எனவே வலுவான கூட்டணியை அமைக்க பிரசாந்த் கிஷோர் முயற்சித்து வருகிறார்.

    பிரசாந்த் கிஷோரின் முயற்சிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் விதமாக சமீபத்தில் பேசியுள்ள சிராக் பாஸ்வான், “நான் காய்கறிகளில் உப்பு போன்றவன். ஒவ்வொரு தொகுதியிலும் 20,000 முதல் 25,000 வாக்குகளை என்னால் பிரிக்க முடியும். எனவே கூட்டணியிலிருந்து வெளிநடப்பு செய்யும் விருப்பம் எனக்கு எப்போதும் உண்டு” என்று கூறினார்.

    சிராக் பாஸ்வானுக்கும், நிதிஷ் குமாருக்கும் எப்போதும் ஆகாது. எனவே தொகுதி எண்ணிக்கையை காரணம் காட்டி பாஸ்வான் கடைசி நேரத்தில் வெளியேறும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், சிராக் பாஸ்வான் பிரதமர் மோடியின் பேச்சை மீறமாட்டார். எனவே தொகுதி பேரத்தை அதிகப்படுத்தவே இதுபோல பேசுகிறார் என்று பாஜக வட்டாரங்கள் பேசுகின்றன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து: 15 பேர் உயிரிழப்பு

    October 7, 2025
    தேசியம்

    ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 மிகப் பெரிய ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    October 7, 2025
    தேசியம்

    ஹரியானா மூத்த ஐபிஎஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை!

    October 7, 2025
    தேசியம்

    கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மேல்முறையீட்டு மனுவை அக்.10-ல் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

    October 7, 2025
    தேசியம்

    ஏஐ தொழில்நுட்பத்துக்கு நம்பிக்கையும், பாதுகாப்பும் அடிப்படையாக இருக்க வேண்டும்: எஸ் ஜெய்சங்கர்

    October 7, 2025
    தேசியம்

    இருமல் மருந்து விஷமாக மாறி 16 குழந்தைகள் உயிரைப் பறித்த கொடூரம்

    October 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கொழுப்பு கல்லீரல் சிகிச்சை: இயற்கையாகவே கொழுப்பு கல்லீரல் மீட்டெடுப்பை ஆதரிக்க 9 பயனுள்ள வீட்டு வைத்தியம்
    • ‘போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்க’ – அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
    • கனமான முடி வளர்ச்சி வேண்டுமா? இந்த 5 விஷயங்களை சியா விதைகளுடன் கலக்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து: 15 பேர் உயிரிழப்பு
    • மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ராமதாஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.