Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, October 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி
    மாநிலம்

    தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி

    adminBy adminOctober 7, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொண்டு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகள் அறுவடை செய்து, கொண்டு வந்த 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.

    இவை தவிர அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாமல் தேங்கிக் கிடப்பதால் கொள்முதல் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன. ஆனால், நிலைமையை சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த காலங்களில் இல்லாத வகையில் நடப்பாண்டில் 6.10 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே குறுவை அறுவடை தொடங்கியுள்ளது; அதை கருத்தில் கொண்டு நெல் கொள்முதலும் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்பாக கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்தே தொடங்கப்பட்டது. ஆனால், விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளில் 25% கூட கொள்முதல் செய்யப்படாதது தான் 4 லட்சம் மூட்டைகள் தேங்குவதற்கு காரணமாகும்.

    தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகளும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா 50 ஆயிரம் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதற்குக் காரணம் கொள்முதல் செய்யப்படும் நெல் முட்டைகளை பாதுகாத்து வைப்பதற்கு நேரடி கொள்முதல் நிலையங்களில் போதிய இட வசதி இல்லாததும், போதிய எண்ணிக்கையில் கிடங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படாததும் தான்.

    அதனால், விவசாயிகள் கொண்டு வந்த 4 லட்சம் நெல் மூட்டைகள் மட்டுமின்றி, அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகளும் திறந்த வெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளையே வைத்திருப்பதற்கு இடம் இல்லாததால் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நெல் கொள்முதல் நிலையங்களில் ஒவ்வொரு நாளும் 40 கிலோ எடை கொண்ட 1000 மூட்டைகள், அதாவது 40 டன் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், அதை விட பல மடங்கு நெல்விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இரு நாள்களுக்கு ஒரு முறையாவது அரவை ஆலைகளுக்கோ, கிடங்குகளுக்கோ கொண்டு செல்லப்பட்டால் தான் ஒவ்வொரு நாளும் 40 டன் நெல்லையாவது கொள்முதல் செய்ய முடியும். அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டாலும் கூட ஒரு வாரத்தில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 5ஆயிரம் நெல் மூட்டைகள் வரை தேங்கிக் கிடக்கும்.

    ஆனால், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் குறித்த காலத்தில் அப்புறப்படுத்தப்ப்படாதது நிலைமை இந்த அளவுக்கு மோசமடைவதற்கு காரணம் ஆகும். கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் அனைத்தும் உடனடியாக கிடங்குகளுக்கோ, அரவை ஆலைகளுக்கோ கொண்டு செல்லப் பட்டு, கொள்முதல் நிலையங்களுக்கு புதிதாக நெல் மூட்டைகள் வரவில்லை என்றாலும் கூட, இப்போது தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை ஆகும்.

    புதிதாக நெல் மூட்டைகள் கொள்முதலுக்காக கொண்டு வரப்பட்டால் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும். ஏற்கனவே கடந்த சில நாள்களாக பெய்த மழையில் பல ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ள நிலையில், அடுத்து வரும் நாள்களில் பெரிய அளவில் மழை பெய்தால் நெல்லுக்கு ஏற்படும் பாதிப்பும், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பும் மதிப்பிட முடியாதவையாகும்.

    காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்பதை கடந்த மாதம் 20&ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் ஆய்வு செய்த போது அறிந்து கொண்டேன். தமிழ்நாட்டில் உள்ள எந்த நெல் கொள்முதல் நிலையத்திலும் அடிப்படை வசதிகள் இல்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் கிடங்குகள் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க போதுமானவையாகவும் இல்லை.

    தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திடம் மொத்தம் 382 கிடங்குகள் உள்ளன. அவற்றில் 18.22 லட்சம் டன் நெல் மூட்டைகளை மட்டும் தான் சேமித்து வைக்க முடியும். எந்த ஒரு குறிப்பிட்ட நாளிலும் 30 லட்சம் டன் முதல் 35 லட்சம் டன் வரையிலான நெல்/ அரிசியை இருப்பு வைக்க வேண்டும் என்பதால் இப்போது இருக்கும் கிடங்குகள் போதுமானவை அல்ல. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் அரும்பாடுபட்டு உற்பத்தி செய்யும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாகின்றன.

    ஆனால், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதால் தான் அவர்கள் இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண மறுக்கின்றனர். இப்போது கொள்முதல் செய்யப்படும் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டால், அவை மழையில் நனையாமல் இருப்பதற்கும், விவசாயிகளை காக்க வைக்காமல் அவர்கள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்வதற்கும் அடுத்த இரு ஆண்டுகளில் கிடங்குகளின் எண்ணிக்கை குறைந்தது 700 ஆகவும், கொள்ளளவு 35 லட்சம் டன்னாகவும் அதிகரிக்கப்பட வேண்டும்.

    ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 250 டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசுக்கு இவற்றின் தேவை குறித்து எந்த புரிதலும் இல்லை.

    நெல் கொள்முதலுக்கான ஏற்பாடுகள் குறித்து கடந்த 2-ஆம் தேதி தான் காவிரி பாசன மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்தாய்வு நடத்தினார். நெல் கொள்முதலில் விவசாயிகளுக்கு எந்த குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தினார்.

    ஆனால், அடுத்த சில நாள்களிலேயே 4 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன என்றால், நெல் கொள்முதல் கட்டமைப்பு எந்த அளவுக்கு சீரழித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். விளம்பரத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு ஆட்சி நடத்தும் திமுக, இனியாவது விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொண்டு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்; கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நீதிபதி கவாய் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் தண்டிக்கப்பட வேண்டும்: இந்தியக் கம்யூ. கோரிக்கை

    October 7, 2025
    மாநிலம்

    இனி கரூர் போன்ற துயரச் சம்பவம் நடைபெறாமல் தடுப்பதே நமது கடமை: கமல்ஹாசன் எம்.பி கருத்து

    October 7, 2025
    மாநிலம்

    கரூர் விபத்தில் ஆட்சியர், எஸ்பி மீதும் தவறுள்ளது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

    October 7, 2025
    மாநிலம்

    கோவை அருகே படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    October 7, 2025
    மாநிலம்

    “இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது” – கரூரில் நடிகை அம்பிகா பேட்டி

    October 7, 2025
    மாநிலம்

    கரூர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறிவரும் விஜய்!

    October 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நடிகர் அஜித்துக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து
    • நீதிபதி கவாய் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் தண்டிக்கப்பட வேண்டும்: இந்தியக் கம்யூ. கோரிக்கை
    • அரோமாதெரபி சாத்தியமான தீங்கு விளைவிக்க முடியுமா? இந்த மாற்று மருத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 3 விஷயங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு: முழு விவரம்!
    • இனி கரூர் போன்ற துயரச் சம்பவம் நடைபெறாமல் தடுப்பதே நமது கடமை: கமல்ஹாசன் எம்.பி கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.