Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, October 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சோஹோ ஆபிஸ் தளத்தை பயன்படுத்த வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு 
    தேசியம்

    சோஹோ ஆபிஸ் தளத்தை பயன்படுத்த வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு 

    adminBy adminOctober 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சோஹோ ஆபிஸ் தளத்தை பயன்படுத்த வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: கம்ப்​யூட்​டரில் நாம் மேற்​கொள்​ளும் அலு​வலக பணி​களுக்​கெல்​லாம் நாம் வெளி​நாட்டு நிறு​வனங்​களின் மென்​பொருட்​களை​தான் பயன்​படுத்தி வரு​கிறோம். இந்​நிலை​யில் உள்​நாட்டு நிறு​வன​மான ஸ்ரீதர் வேம்​பு​வின் சோஹோ நிறு​வனம் ‘சோஹோ ஆபிஸ் சூட்’ என்ற ஆன்​லைன் தளத்தை உரு​வாக்​கி​யுள்​ளது. இதில் உள்ள மென்​பொருட்​கள் மூலம் அனைத்து அலு​வலக ஆவண பணி​களை​யும் மேற்​கொள்ள முடி​யும்.

    இந்நிலையில், மத்​திய கல்வி துறை அமைச்​சகம் அனைத்து அலுவலகங்களுக்கும் ஒரு சுற்​றறிக்கை அனுப்​பி​யுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: சோஹோ​வின் உள்​நாட்டு ஆபிஸ் ஆன்​லைன் மென்​பொருட்​களை பயன்​படுத்​து​வதன் மூலம், சுதேசி இயக்​கத்​தில் நாம் தைரிய​மான நடவடிக்​கையை எடுக்​கிறோம். உள்​நாட்டு புது​மை​யுடன் இந்​தியா முன்​னேற நாம் அதி​காரம் அளிக்​கிறோம். இதன் மூலம் உள்​நாட்டு டிஜிட்​டல் கட்​டமைப்பு வலு​வடைந்​து, நமது தரவு​கள் பாது​காப்​புடைய​தாக​வும், தற்​சார்​புடைய​தாக​வும் இருக்​கும்.

    இந்த மாற்​றம், உலகளா​விய டிஜிட்​டல் பொருளா​தா​ரத்​தில், இந்​தி​யா​வின் நிலைப்​பாட்டை வலுப்​படுத்​தும். சேவை பொருளா​தா​ரம் என்ற நிலை​யி​லிருந்து உற்​பத்தி தேசம் என்ற நிலைக்கு நாடு செல்ல உதவும். மத்​திய கல்​வித்​துறை அமைச்​சகத்​தின் கீழ் பணி​யாற்​றும் அனைத்து அதி​காரி​களும், அனைத்து அலு​வலக ஆவணங்​களுக்​கும் சோஹோ ஆபிஸ் தளத்தை பயன்​படுத்த வேண்​டும். சோஹோ ஆபிஸ் தற்​போது என்​ஐசி மெயிலுடன் ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் தனி லாகின் அல்​லது பதி​விறக்​கங்​கள் தேவையில்​லை.

    சோஹோ​வின் அனைத்து மென்​பொருள் உபகரணங்​களை​யும் பயன்​படுத்​தும் முறை​களை அதி​காரி​கள் தெரிந்து வைத்​திருக்க வேண்​டும். தொழில்​நுட்ப உதவிக்கு சிபிஐஎஸ் / என்​ஐசி பிரிவை தொடர்பு கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    சோஹோ ஆபிஸ் சூட் என்​றால் என்ன? – சோஹோ நிறு​வனத்​தால் உரு​வாக்​கப்​பட்ட ஆன்​லைன் தளம் ‘சோஹோ ஆபிஸ் சூட்’. இத்​தளம் ஆவணங்​கள், ஸ்பிரட் ஷீட் உட்பட அனைத்து அலு​வலக பணி​களை​யும் பாது​காப்​பாக மேற்​கொள்ள உதவு​கிறது. சோஹோ ரைட்​டர் மூலம் ஆவணங்​களை தயார் செய்​ய​லாம், சோஹோ ஷீட் மூலம் ஸ்பிரட்​ஷீட் பணி​களை மேற்​கொள்​ளலாம். சோஹோ ஷோ மூலம் தகவல்​களை தெரிவிக்​கலாம். அனைத்​தும் சோஹோ வொர்க்​டிரைவ் வழி​யாக கிளவுடில் சேமிக்​கப்​படு​கிறது. இதை பயன்​படுத்​துபவர்​கள் எந்​நேர​மும், தங்​களின்​ பணி​யை மேற்​கொள்​ளலாம்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஏஐ தொழில்நுட்பத்துக்கு நம்பிக்கையும், பாதுகாப்பும் அடிப்படையாக இருக்க வேண்டும்: எஸ் ஜெய்சங்கர்

    October 7, 2025
    தேசியம்

    இருமல் மருந்து விஷமாக மாறி 16 குழந்தைகள் உயிரைப் பறித்த கொடூரம்

    October 7, 2025
    தேசியம்

    பிஹார் தேர்தலில் போட்டியிட உள்ள 25 வயது நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர்

    October 7, 2025
    தேசியம்

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் சஸ்பெண்ட்

    October 7, 2025
    தேசியம்

    ‘எனக்கு அதில் வருத்தமில்லை; மன்னிப்பு கேட்க மாட்டேன்’ – தலைமை நீதிபதி மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோர்!

    October 7, 2025
    தேசியம்

    ஆந்திர முதல்வருக்கு கொலை மிரட்டல்

    October 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோவை அருகே படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
    • இயற்பியலில் நோபல் பரிசு 2025 வெற்றியாளர்கள் அறிவித்தனர்: அவர்கள் யார், அவர்கள் ஏன் வென்றார்கள்- எல்லா விவரங்களும் இங்கே | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது” – கரூரில் நடிகை அம்பிகா பேட்டி
    • மலேரியா அறிகுறிகள்: டெல்லியில் மலேரியா வழக்குகள் பதிவு உயர்: முக்கிய அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஏஐ தொழில்நுட்பத்துக்கு நம்பிக்கையும், பாதுகாப்பும் அடிப்படையாக இருக்க வேண்டும்: எஸ் ஜெய்சங்கர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.