Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, October 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இலங்கை கடற்கொள்ளையர் தாக்கியதில் நாகை மீனவர்கள் 11 பேர் காயம்
    மாநிலம்

    இலங்கை கடற்கொள்ளையர் தாக்கியதில் நாகை மீனவர்கள் 11 பேர் காயம்

    adminBy adminOctober 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இலங்கை கடற்கொள்ளையர் தாக்கியதில் நாகை மீனவர்கள் 11 பேர் காயம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாகப்பட்டினம்/காரைக்கால்: கடலில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த நாகை மீனவர்​கள் 11 பேரை தாக்கி படகு​களில் இருந்த வலை உள்​ளிட்ட பொருட்​களை இலங்கை கடற்​கொள்​ளை​யர்​கள் கொள்​ளை​யடித்​துச் சென்றனர். நாகை நம்​பி​யார் நகரைச் சேர்ந்த விக்​னேஷ்(28), விமல்​(26), சுகு​மார்​(31), திரு​முரு​கன்​ (31), முரு​கன்​(38), அருண்​(27) ஆகிய 6 பேர் ஃபைபர் படகில் நேற்று முன்​தினம் இரவு கோடியக்​கரை கிழக்கே மீன்​பிடித்து கொண்​டிருந்​தனர்.

    அப்​போது, அங்கு வந்த இலங்கை கடற்​கொள்​ளை​யர் 8 பேர், மீனவர்​களின் படகில் ஏறி இரும்​புக் கம்​பி, கட்​டை, கத்தி உள்​ளிட்ட ஆயுதங்​களால் மீனவர்​களைத் தாக்​கி, அவர்​களிடம் இருந்த வெள்ளி செயின், இன்​ஜின், செல்​போன், ஜிபிஎஸ் கரு​வி, வாக்கிடாக்கி ஆகிய​வற்றை பறித்​துச் சென்​றனர்.

    இதே​போல, கடலில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த நம்​பி​யார் நகரைச் சேர்ந்த சசிகு​மார் ​(30), உதயசங்​கர்​(28), சிவசங்​கர்​(25), கிரு​பா(29), கமலேஷ்(19) ஆகிய 5 பேரை​யும் நேற்று முன்​தினம் இரவு தாக்​கி, இன்​ஜின், ஜிபிஎஸ், செல்​போன், 500 கிலோ வலை ஆகிய​வற்​றைப் பறித்து சென்​றனர்.

    2 படகு​களிலும் மொத்​தம் ரூ.4 லட்​சம் மதிப்​பிலான பொருட்​களை இலங்கை கடற்​கொள்​ளை​யர் கொள்​ளை​யடித்​துச் சென்​றுள்​ளனர். இதில், காயமடைந்த 10 பேர் நாகை அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். பலத்த காயமடைந்த சிவசங்​கர், தஞ்​சாவூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

    இதுகுறித்​து, நாகை கடலோர காவல் குழும போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்றனர். இந்த சம்​பவத்​தைக் கண்​டித்து நாகை நம்​பி​யார் நகர் மீனவர்​கள் தொடர் வேலைநிறுத்​தப் போராட்​டத்தை அறி​வித்​துள்​ளனர். அச்​சமின்றி மீன்​பிடி தொழில் செய்ய மத்​திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். பாதிக்​கப்​பட்ட மீனவர்​களுக்கு உரிய இழப்​பீடு வழங்க வேண்​டும் என மீனவர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

    ஆந்​திரா மீனவர்​கள் தாக்​குதல் காரைக்​கால் மாவட்​டம் கிளிஞ்​சல்​மேடு மீனவ கிராமத்​தைச் சேர்ந்த 24 மீனவர்​கள் 2 படகு​களில், ஆந்​திர மாநிலப் பகு​தி​ கடல் பரப்​பில் நேற்று முன்​தினம் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர்.

    அப்​போது, அங்கு வந்த ஆந்​திர மீனவர்​கள் 50-க்​கும் மேற்​பட்​டோர், காரைக்​கால் மீனவர்​களை தாக்​கி​ அவர்​களிட​மிருந்த வாக்கி டாக்​கி, வலைகள், மீன்​கள், செல்​போன்​களை​ பறி​த்து சென்றுள்​ளனர். இதில் காயமடைந்த காரைக்​கால் மீனவர்​கள் நேற்று கரை திரும்பி தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தீர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம்: ‘எதையும் சிரித்துக்கொண்டே கடக்க வேண்டும்’ – நீதிபதி செந்தில்குமார் ஆதங்கம்

    October 7, 2025
    மாநிலம்

    பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    October 7, 2025
    மாநிலம்

    விவசாயிகள் தற்கொலை குறித்து ஆய்வு செய்ய தனி குழு அமைக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

    October 7, 2025
    மாநிலம்

    பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம்

    October 7, 2025
    மாநிலம்

    மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் முதன்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி

    October 7, 2025
    மாநிலம்

    பாம்பனில் அரியவகை ‘டூம்ஸ்டே மீன்’ சிக்கியது

    October 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தீர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம்: ‘எதையும் சிரித்துக்கொண்டே கடக்க வேண்டும்’ – நீதிபதி செந்தில்குமார் ஆதங்கம்
    • ஜாவேத் ஹபீப்: சம்பலில் பிரபல சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப்பிற்கு எதிராக ஏன் 20 ஃபிர் பதிவு செய்யப்பட்டுள்ளது? | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘எனக்கு அதில் வருத்தமில்லை; மன்னிப்பு கேட்க மாட்டேன்’ – தலைமை நீதிபதி மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோர்!
    • “4 லட்சம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு” – ஐநாவில் பாக். மீது இந்தியா குற்றச்சாட்டு
    • பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.