Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, October 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாக் நீரிணை கடல் பகுதியை நீந்திக் கடந்த மாற்றுத் திறனாளி சிறுவன்
    மாநிலம்

    பாக் நீரிணை கடல் பகுதியை நீந்திக் கடந்த மாற்றுத் திறனாளி சிறுவன்

    adminBy adminOctober 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாக் நீரிணை கடல் பகுதியை நீந்திக் கடந்த மாற்றுத் திறனாளி சிறுவன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமேசுவரம்: ஊனம் தடையல்ல என்ற விழிப்​புணர்வை ஏற்​படுத்த இலங்​கை​யில் உள்ள தலைமன்​னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்​முனை வரை​யிலான பாக் நீரிணை கடல் பகு​தியை மாற்​றுத் திற​னாளி சிறு​வன் 9 மணி நேரம் 11 நிமிடங்​களில் நீந்​திக் கடந்​தார். சென்னை முகப்​பேர் மேற்கு பகு​தி​யைச் சேர்ந்த பெரி​யார் செல்​வன், பத்​மப்​பிரியா தம்​ப​தி​யின் மகன் புவிஆற்​றல் (12). முகப்​பேரில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படிக்​கிறார். இவர் முழங்​காலுக்கு கீழே பாதிக்​கப்​பட்ட மாற்​றுத் திற​னாளி​யா​வார்.

    2022-ல் சென்னை ஷெனாய் நகரில் உள்ள தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் வழி​காட்​டு​தலுடன், மாணவர் புவி ஆற்​றல் நீச்​சல் பயற்​சி​யைத் தொடங்​கி​னார். 2024-ல் கோவா​வில் நடை​பெற்ற தேசிய அளவி​லான நீச்​சல் போட்​டிகளில் தங்​கம் மற்​றும் வெள்​ளிப் பதக்​கம் வென்​றுள்​ளார்.

    இந்​நிலை​யில், நீந்​து​வதற்கு ஊனம் தடையல்ல என்​பதை வலி​யுறுத்​து​வதற்​காக, இலங்​கை​யில் உள்ள தலைமன்​னாரிருந்து தனுஷ்கோடி வரை சுமார் 30 கி.மீ. தொலைவி​லான பாக் நீரிணைக் கடலை நீந்​து​வதற்​காக இந்​திய வெளி​யுறவுத் துறை, இலங்கை தூதரகம் மற்​றும் பாது​காப்பு துறை அமைச்​சகத்​திடம் அனு​மதி கோரி​யிருந்தனர்.

    உரிய அனு​மதி கிடைத்த நிலை​யில் கடந்த 3-ம் தேதி ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​தில் இருந்து ஒரு விசைப்​படகு மற்​றும் நாட்​டுப் படகில்சிறு​வனின் பெற்​றோர், பயிற்​சி​யாளர், மருத்​து​வர் மற்​றும் மீனவர்​கள் உள்​ளிட்ட 20 பேர் கொண்ட குழு​வினருடன் தலைமன்​னாருக்கு புறப்​பட்டு சென்​றனர். நேற்று முன்​தினம் அதி​காலை 2.45 மணி​யள​வில் தலைமன்​னாரிலிருந்து நீந்​தத் தொடங்​கிய சிறு​வன் காலை 11.56 மணிக்கு தனுஷ்கோடி அரிச்​சல்​முனை கடற்​பகு​தியை வந்​தடைந்​தார்.

    தொடர்ந்து 9 மணி நேரம் 11 நிமிடங்​களில் 30 கி.மீ. தொலைவு நீந்​தி​யுள்​ளார். இதன் மூலம் மாற்​றுத் திற​னாளி மாணவர், கடலில் அதிக தூர​மும், அதிக நேர​மும் தனி​யாக நீந்​திய சாதனையை புவி ஆற்றல் படைத்​துள்​ளார்.

    இதற்கு முன் தலைமன்​னார், தனுஷ்கோடி இடையே​யான பாக் நீரிணை கடல் பகு​தியை 2022 மார்ச் 20-ம் தேதி மும்​பையை சேர்ந்த, ஆட்​டிசத்​தால் பாதிக்​கப்​பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்​திக் கடந்​துள்​ளார். இந்த சாதனையை​யும் சிறு​வன் புவி ஆற்​றல் முறியடித்​துள்​ளார். சிறு​வன் புவி ஆற்​றலுக்கு இந்​திய கடலோர காவல் படை​யின​ரால் சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு குடியரசு தலைவர் முர்மு அக்.22-ல் வருகை

    October 7, 2025
    மாநிலம்

    விருதுநகர் | வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

    October 7, 2025
    மாநிலம்

    “திமுக அரசியல் எதிரி என்றால் அதை வீழ்த்துவது பற்றி விஜய் பேச வேண்டும்” – சீமான் சிறப்பு நேர்காணல்

    October 7, 2025
    மாநிலம்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் 

    October 7, 2025
    மாநிலம்

    ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின், இபிஎஸ்: மருத்துவமனை வந்து சிகிச்சை குறித்து கேட்டறிந்த அன்புமணி 

    October 7, 2025
    மாநிலம்

    ராமதாஸ் ஐசியுவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை: மருத்துமனையில் அன்புமணி பேட்டி

    October 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிஎஃப்ஐ கோப்பைக்கான குத்துச்சண்டை: அங்குஷிதா, அருந்ததி சாம்பியன்
    • ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு குடியரசு தலைவர் முர்மு அக்.22-ல் வருகை
    • பெரியவர்கள் உண்மையில் உயரமாக வளர முடியுமா? ஆம், மக்கள் இப்போது தங்கள் உயரத்தை அதிகரிக்கும் ஒரு வழி உள்ளது
    • பாக் நீரிணை கடல் பகுதியை நீந்திக் கடந்த மாற்றுத் திறனாளி சிறுவன்
    • விருதுநகர் | வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.