Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, October 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தனியார் சோலார் உற்பத்தி நிலையத்துக்கு எதிர்ப்பு: தென்காசியில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
    மாநிலம்

    தனியார் சோலார் உற்பத்தி நிலையத்துக்கு எதிர்ப்பு: தென்காசியில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

    adminBy adminOctober 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தனியார் சோலார் உற்பத்தி நிலையத்துக்கு எதிர்ப்பு: தென்காசியில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தென்காசி: ஆலங்குளம் அருகே கல்லத்திகுளம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லத்திகுளம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக வாங்கப்பட்ட நிலத்தில் இருந்த ஏராளமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மரங்களை வெட்டி இயற்கையை அழிப்பதாக கூறி, சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த கல்லத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கல்லத்திகுளத்தில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். கோரிக்கை தொடர்பாக முக்கிய பிரமுகர்கள் 5 பேர் மட்டும் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, ஆட்சியரை சந்தித்து மனு அளிக்குமாறு போலீஸார் கூறினர். அதன் பின்னர், 5 பேர் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று மனு அளித்துவிட்டு வெளியில் வந்தனர். அதன் பின்னரும் போராட்டம் நீடித்தது.

    ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களிடம் தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களில் சிலர் அடுத்தடுத்து தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். தற்கொலைக்கு முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, பிடித்துக்கொண்டனர்.

    உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிய 8 பேர் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலக கேட்டை மூடிய போலீஸார், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியவர்களை பிடித்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தீயணைப்புப் படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “இனி ஒரு தலைவராக…” – விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி அறிவுரை

    October 6, 2025
    மாநிலம்

    தவெகவுக்கு பாஜக அடைக்கலம் தருவதாக கூறுவது அபத்தம்: அண்ணாமலை

    October 6, 2025
    மாநிலம்

    “ஆளுநரை எதிரியாக சித்தரித்து வருகிறது திமுக அரசு” – எல்.முருகன் கருத்து

    October 6, 2025
    மாநிலம்

    “எங்களைப் போன்ற கட்சிகள் எல்லாம்…” – நடைபயண அனுமதி மறுப்பால் அன்புமணி அதிருப்தி

    October 6, 2025
    மாநிலம்

    பாஜகவின் அரசியல் நோக்கத்துக்கு விஜய் பலியாகிவிடக் கூடாது: திருமாவளவன்

    October 6, 2025
    மாநிலம்

    வரலாற்று ஆய்வாளர் நடன.காசிநாதன் மறைவு: முதல்வர் இரங்கல்

    October 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “இனி ஒரு தலைவராக…” – விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி அறிவுரை
    • பயனர்களுக்கு கட்டண சந்தாவில் ஸ்மார்ட்போன் வழங்கும் BytePe: இதன் சிறப்பு என்ன?
    • வெண்ணெய் பழுப்பு ஏன் பழுப்பு நிறமாக மாறுகிறது, அவற்றை எவ்வாறு புதியதாக வைத்திருப்பது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஹே டர்பன் ஹெட், வீட்டிற்குச் செல்லுங்கள்’: சீக்கிய கனேடிய அரசியல்வாதி ஹார்டீப் க்ரூவால் இனவெறி தாக்குதலை எதிர்கொள்கிறார், இது சோர்வாகவும் வேதனையாகவும் இருக்கிறது – இந்தியாவின் டைம்ஸ்
    • தவெகவுக்கு பாஜக அடைக்கலம் தருவதாக கூறுவது அபத்தம்: அண்ணாமலை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.