Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, October 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»35 சிக்சர்களுடன் முச்சதம் விளாசிய இந்திய வம்சாவளி ஆஸி. வீரர் ஹர்ஜஸ் சிங்!
    விளையாட்டு

    35 சிக்சர்களுடன் முச்சதம் விளாசிய இந்திய வம்சாவளி ஆஸி. வீரர் ஹர்ஜஸ் சிங்!

    adminBy adminOctober 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    35 சிக்சர்களுடன் முச்சதம் விளாசிய இந்திய வம்சாவளி ஆஸி. வீரர் ஹர்ஜஸ் சிங்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஒரு நாள் கிரேட் போட்டி ஒன்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய இடது கை வீரர் ஹர்ஜஸ் சிங் முச்சதம் விளாசினார். இதில் 35 சிக்சர்கள் அடங்கும். இவர் 141 பந்துகளில் 314 ரன்களைக் குவித்துள்ளார்.

    இவரது இந்த முச்சதம் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் ஃபர்ஸ்ட் கிரேடு கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது பெரிய ஸ்கோர் மற்றும் ஆஸ்திரேலிய கிரேடு கிரிக்கெட்டில் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் ஆகும். இவர் வெஸ்டர்ன் சப் அர்ப்ஸ் அணிக்கு ஆடினார்.

    இந்திய வம்சாவளி பெற்றோருக்கு சிட்னியில் பிறந்த ஹர்ஜாஸ் சிங், 2024 U-19 உலகக் கோப்பையில் சிறந்து விளங்கினார், இந்த இன்னிங்ஸ் குறித்து அவர் கூறும்போது பயிற்சி மற்றும் பவர்-ஹிட்டிங் தினசரி பிராக்டீஸ் ஆகியவையே காரணம் என்றார்.

    சாதாரண கிரேடு லெவல் கிரிக்கெட் இவரது காட்டடியினால் பேட்டர்ன் பார்க் மைதானம் உயிர் பெற்றது. ஒருநாள் கிரேடு கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக முச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவருக்குச் சேர்த்துள்ளது.

    ஆஸ்திரேலிய கிரேடு கிரிக்கெட்டின் போக்கையே மாற்றிய வரலாற்று இன்னிங்ஸ் என்று இந்த இன்னிங்ஸை அங்கு விதந்தோதுகின்றனர். 1903 ஆம் ஆண்டு நியூசவுத் வேல்ஸ் பிரிமியர் முதல் கிரேடு கிரிக்கெட்டில் விக்டர் டிரம்ப்பர் என்ற வீரர் 335 ரன்களை எடுத்துள்ளார். 2007-ல் ஃபில் ஜாக் 321 ரன்களை எடுத்தார்.

    இந்த இன்னிங்சில் நியூசவுத் வேல்ஸ் கிரேடு அணியின் ஸ்கோர் கார்டில் அடுத்த அதிகபட்ச ஸ்கோர் 37 என்றால் ஹர்ஜஸ் சிங்கின் ஆதிக்கம் எப்படி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    2005-ம் ஆண்டில் சண்டிகாரில் பிறந்த ஹர்ஜஸ் சிங் வளர்ந்தது சிட்னியில். 2024 யு-19 உலகக்கோப்பையில் முதன் முதலாக இவர் பெயர் வெளியே தெரியத் தொடங்கியது. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 55 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்ல காரணமாகத் திகழ்ந்தார் இந்த இந்திய வம்சாவளி வீரர் ஹர்ஜஸ் சிங்.

    2023-ல் இங்கிலாந்துக்கு எதிராக யு-19 போட்டியில் சதம் விளாசினார். அப்போதே இவரது திறமை பளிச்சிட்டது. இந்த அதிரடி முச்சதத்தில் முதல் சதத்தை 74 பந்துகளில் விளாசினார் ஹர்ஜஸ் சிங். அதன் பிறகு அடித்த காட்டடியில் எத்தனை பந்துகள் தொலைந்தன என்று தெரியவில்லை. 67 பந்துகளை எதிர்கொண்டு 214 ரன்களை மேலும் சாத்தினார். டாம் முல்லன் என்னும் ஸ்பின்னர் பந்தை சிக்சருக்கு அனுப்பி முச்சதத்தை நிறைவு செய்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    இந்தியா – பாகிஸ்தான் போட்டி வேண்டும் என்பதற்காக ஷெட்யூலை ‘ஏற்பாடு’ செய்ய வேண்டாம்: மைக்கேல் ஆத்தர்டன்

    October 6, 2025
    விளையாட்டு

    பாகிஸ்தானை 88 ரன்களில் வீழ்த்தியது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்தியா: மகளிர் உலகக் கோப்பை

    October 6, 2025
    விளையாட்டு

    சர்வதேச கிரிக்கெட்டில் மிக நீண்ட நாட்கள் விளையாடிய வீரர் யார்?

    October 6, 2025
    விளையாட்டு

    இந்தியாவுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா 2-1 என வெல்லும்: ஆரூடம் சொல்கிறார் ஆரோன் பின்ச்

    October 6, 2025
    விளையாட்டு

    தமிழ்நாடு சூப்பர் லீக் போட்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை: தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவிப்பு

    October 6, 2025
    விளையாட்டு

    கம்பீருக்கு ‘ஆமாஞ்சாமி’ போட்டால் அணியில் தேர்வு: ஸ்ரீகாந்த் சரமாரி சாடல்

    October 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க ரூ.152 கோடி ஒதுக்கீடு
    • ஒவ்வொரு மூலையிலும் பிரகாசிக்க தீபாவளி 2025 க்கான 10 சிறந்த வீட்டு துப்புரவு உதவிக்குறிப்புகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி: முதல்வர் மம்தா இன்று நேரில் பார்வையிடுகிறார்
    • இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்தது
    • 2 சுரங்கப்பாதை பணிகள் விரைவில் நிறைவு: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.