Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, October 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்களை வழங்க உத்தரவு 
    கல்வி

    காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்களை வழங்க உத்தரவு 

    adminBy adminOctober 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்களை வழங்க உத்தரவு 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (அக்.6) திறக்கப்படுகின்றன. இதையடுத்து முதல் நாளிலேயே மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடநூல்களை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு மற்றும் முதல் பருவத் தேர்வு கடந்த செப்.10-ல் தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு செப்.27 முதல் அக்.5-ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.

    இந்நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று (அக்.6) திறக்கப்படுகின்றன. தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் வளாகங்களில் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் நாளிலேயே 1 முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 32 லட்சத்து 60,960 மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடநூல்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை விநியோகிக்க வேண்டும் என்றும், பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பருவமழை முன்னேற்பாடுகள்: வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்புக்காக தலைமை ஆசிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேங்கும் பகுதிகள், திறந்த சாக்கடைக் கிணறுகள், கழிவுநீர் குழாய்கள் மற்றும் நீர்தேங்கும் சாக்கடை மூடப்பட்டு இருப்பதை உறுதிசெய்து, மாணவர்கள் அப்பகுதிகளில் செல்லாதபடி கண்காணிக்க வேண்டும்.

    மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என பெற்றோருக்கு அறிவுரை வழங்க வேண்டும். அதேபோல, பள்ளியின் சுற்றுச்சுவர் உறுதித்தன்மை, மின் இணைப்புகள் சரியாக உள்ளதா என்று கண்காணித்து சரிசெய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    காந்திகிராம பல்கலை. உலக ஆராய்ச்சியில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது: வேந்தர் கே.எம்.அண்ணாமலை

    October 5, 2025
    கல்வி

    தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தரநிலை அறிக்கை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    October 5, 2025
    கல்வி

    பெட்ட குறும்பர் பழங்குடியினத்தின் முதல் வழக்கறிஞர் கின்மாரி!

    October 4, 2025
    கல்வி

    போக்குவரத்து விதிகளை மாணவர்கள் மதிக்க வேண்டும்: தோல் ஏற்றுமதி குழும மேலாண் இயக்குநர் அறிவுரை

    October 4, 2025
    கல்வி

    மாணவர்களை வெற்றியாளர்களாக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம்

    October 3, 2025
    கல்வி

    விஜயதசமி நாளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ‘அ’ எழுதி  கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்

    October 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மழையில் பாடுவது – ஜேன் குடால் மற்றும் அவரது சிம்பன்ஸிகள் எப்படி நம் உலகத்தை மாற்றினார்கள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மேற்கு வங்கத்தில் நிலச்சரிவில் 20 பேர் உயிரிழப்பு
    • முதல் சம்பளம்… ‘பட்டாபி எனும் நான்’ – எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 1
    • வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம்: உலாவிடத்தில் இருப்பதாக பூங்கா நிர்வாகம் தகவல்
    • புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.11,060-க்கு விற்பனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.