நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் பிரச்சாரப் பயணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 19, 20, 21-ம் தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு, கடந்த 19-ம் தேதி ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கனமழை அறிவிப்பு காரணமாக செப். 20, 21-ம் தேதிகளில் நடைபெறவிருந்த பிரச்சாரப் பயணம் அக்.4, 5-ம் தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், அக். 5, 6-ம் தேதிகளுக்கு மீண்டும் மாற்றம் செய்து அதிமுக தலைமை அறிவித்தது.
அதன்படி இன்று திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதியிலும், நாளை நாமக்கல், பரமத்தி வேலூர் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், பிரச்சாரத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 4 இடங்களும் மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட இடங்கள் என்பதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி பிரச்சாரத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், பிரச்சார தேதி 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 8-ம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையத்திலும், 9-ம் தேதி நாமக்கல், பரமத்தி வேலூரிலும் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.