Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, October 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆலங்குடி வெங்கடாசலத்துக்கு அஞ்சலி செலுத்த தயாராகும் அரசியல் கட்சிகள்!
    மாநிலம்

    ஆலங்குடி வெங்கடாசலத்துக்கு அஞ்சலி செலுத்த தயாராகும் அரசியல் கட்சிகள்!

    adminBy adminOctober 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆலங்குடி வெங்கடாசலத்துக்கு அஞ்சலி செலுத்த தயாராகும் அரசியல் கட்சிகள்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆலங்குடி வெங்கடாசலம் என்று சொன்னால் அதிமுக-வின் சீனியர் தலைவர்கள், “அவரா..?” என்று அதிசயித்து வாய்பிளப்பார்கள். ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை என்பதற்காக அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று, அப்பேர்பட்ட அம்மாவுக்கே தனது செல்வாக்கைக் காட்டியவர் வெங்கடாசலம்.

    புதுக்​கோட்டை மாவட்​டம் வடகாடு கிரா​மத்​தைச் சேர்ந்​தவர் அ.வெங்​க​டாசலம். கட்​சி​யால் தனக்கு என்ன பலன் என்று பார்ப்​ப​தை​விட தன்​னால் கட்​சிக்கு என்ன பலன் என்று பார்த்த தனித்​து​வ​மான அரசி​யல்​வா​தி​களில் வெங்​க​டாசல​மும் ஒரு​வர். அதி​முக-​வில் சாமானிய தொண்​ட​னாக இருந்து அமைப்​புச் செய​லா​ளர் வரைக்​கும் உயர்ந்​தவர். புதுக்​கோட்டை மற்​றும் சிவகங்கை மாவட்​டத்​தைச் சேர்ந்த முத்​தரையர் சமூகத்து மக்​கள் வெங்​க​டாசலத்தை தங்​களுக்​கான தலை​வ​னாகவே பார்த்​தார்​கள். முதல் முறை​யாக இவருக்கு 1984-ல் ஆலங்​குடி தொகு​தி​யில் சீட் கொடுத்​தார் எம்​ஜிஆர். அந்​தத் தேர்​தலில் வெற்​றி​பெற்​றாலும் அடுத்து வந்த மூன்று தேர்​தல்​களில் போட்​டி​யிடும் வாய்ப்பை அதி​முக இவருக்கு வழங்​க​வில்​லை.

    1996-ல் ஜெயலலிதா தனக்கு ஆலங்​குடி​யில் வாய்ப்​பளிப்​பார் என்று பெரிதும் எதிர்​பார்த்​தார் வெங்​க​டாசலம். ஆனால், இவருக்கு வாய்ப்​பளிக்​க​வில்லை ஜெயலலி​தா. அப்​போது தனது ஆதர​வாளர்களை அழைத்​துக் கருத்​துக் கேட்ட வெங்​க​டாசலம், அவர்​கள் தந்த ஆலோ​சனைப்​படி ஆலங்​குடி​யில் சுயேச்​சை​யாக வேட்​புமனு தாக்​கல் செய்​தார். அந்​தத் தேர்​தலில் பெரு​வாரி​யான இடங்​களை திமுக – தமாகா கூட்​டணி கைப்​பற்​றிய நிலை​யில், ஆலங்​குடியை கைப்​பற்றி அதி​முக தலை​மைக்கு அதிர்ச்சி வைத்​தி​யம் கொடுத்​தார் வெங்​க​டாசலம்.

    ஜெயலலி​தாவை பகைத்​துக் கொண்​ட​தால் அவர் இனி அதி​முக பக்​கம் போக​மாட்​டார்; திமுக-​வில் இணைந்​து​விடு​வார் என்​றெல்​லாம் வெங்​க​டாசலம் குறித்து செய்​தி​கள் பரவிய நிலை​யில், எந்​தச் சலன​மும் இல்​லாமல் அமை​தி​யாகவே இருந்​தார். அவரது பொறுமை​யை​யும் மக்​கள் செல்​வாக்​கை​யும் மெச்​சிய ஜெயலலிதா அவரை மீண்​டும் அதி​முக-​வில் சேர்த்​துக் கொண்​டதுடன், 2001 தேர்​தலில் அவரை ஆலங்​குடி​யில் நிற்​க​வும் வைத்​தார்.

    இரண்​டாவது முறை​யாக ஆலங்​குடியை வென்​றெடுத்த வெங்​க​டாசலத்தை பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறைக்கு அமைச்​ச​ராக்​கி​னார் ஜெயலலி​தா. ஆனால், அடுத்த தேர்​தலில் அவரால் ஆலங்​குடியை தக்​கவைக்க முடிய​வில்​லை. இந்த நிலை​யில், தனிப்​பட்ட பிரச்​சினை காரண​மாக 2010-ல் எதிரி​களால் வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்​டார் வெங்​க​டாசலம். அப்​போது புதுக்​கோட்டை மாவட்​டமே கலவரக்​கா​டானது.

    அடுத்த ஆறே மாதத்​தில் 2011 சட்​டமன்ற தேர்​தல் வந்​தது. அப்​போது வெங்​க​டாசலத்​தின் மகனுக்கு அதி​முக சீட் கொடுக்​கும் என பலரும் எதிர்​பார்த்​தார்​கள். ஆனால், திருச்​சி​யைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர் கு.ப.கிருஷ்ணனை ஆலங்​குடி​யில் நிறுத்​தி​னார் அம்​மா. இதனால் தந்தை வழி​யில் வெங்​க​டாசலத்​தின் மகன் ராஜ​பாண்​டியன் சுயேச்​சை​யாக நின்​றார். ஆனால், தந்தைக்கு இருந்த ஆதரவு மகனுக்கு இல்​லாமல் போன​தால் கு.ப.கிருஷ்ணன் வெற்றி பெற்​றார். இருந்த போதும். அனைத்து தரப்பு மக்​களிட​மும் நெருங்​கிப் பழகிய வெங்​க​டாசலம், முத்​தரையர் சமூகத்து மக்​களின் தனித்த அடை​யாள​மாக மாறிப்​போ​னார்.

    ஆண்டு தோறும் அக்​டோபர் 7-ம் தேதி வெங்​க​டாசலம் நினைவு நாளில் வடகாட்​டில் உள்ள அவரது நினை​விடத்​தில் அவரது அபி​மானிகள் தமி​ழ​கத்​தின் பல பகு​தி​களில் இருந்து வந்து அஞ்​சலி செலுத்​து​கி​றார்​கள். இதில், தேர்​தல் கால​மாக இருந்​தால் அனைத்​துக் கட்​சிகளும் போட்​டி​போட்டு வந்து அஞ்​சலி செலுத்​தும். அப்​படித்​தான் இந்த ஆண்​டும் வெங்​க​டாசலத்​துக்கு அரசி​யல் கட்​சிகள் அஞ்​சலி செலுத்​து​வதற்​காக ஃபிளெக்​ஸ்​கள், பேனர்​கள் சகிதம் தயா​ராகிக் கொண்​டிருக்​கிறது வடகாடு.

    இது குறித்து நம்​மிடம் பேசிய வெங்​க​டாசலத்​தின் ஆதர​வாள​ரும் அதி​முக ஒன்றி இலக்​கிய அணி செய​லா​ள​ரு​மான முத்​து​மாணிக்​கம் “அதி​முக-வை தனது சொந்​தக் கட்சி போலவே பாவித்து வந்​தவர் வெங்​க​டாசலம். சுயேச்​சை​யாக நின்று வென்ற போது கூட அவர் இன்​னொரு கட்​சிக்​குப் போக​வில்​லை. புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் மட்​டுமில்​லாது பிற மாவட்​டங்​களி​லும் அவருக்​கான அரசி​யல் இருந்​தது.

    தனது எளிமைக்​காகத்​தான் மறைந்த பிறகும் அவர் போற்​றப்​படு​கி​றார். அவரால் பலபேர் அரசி​யலில் உயர்ந்த நிலைக்கு சென்​றுள்​ளனர். அதனால் தான் அவரது நினைவு நாளில் இளைஞர்​கள் இங்கு அதி​கள​வில் குவி​கின்​ற​னர். அவரை ஒதுக்​கி​விட்டு அரசி​யல் செய்​ய​முடி​யாது என்​ப​தால் தான் தேர்​தல் காலத்​தில் அரசி​யல் கட்​சிகள் போட்டி போட்​டுக்​கொண்டு ஆலங்​குடிக்கு வரு​கின்​றன” என்​றார்.

    எம்​ஜிஆர் விசு​வாசி​யான வெங்​க​டாசலம், ‘வாழ்​ந்​​தா​லும் மறைந்​​தா​லும் பேர் சொல்ல வேண்​டும்​… இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்​டும்’ என்​பது போலத்​​தான் வாழ்​ந்​துவிட்​டுப் போயிருக்​கிறார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கை வந்த பிறகு பேசுவோம்: செந்தில் பாலாஜி உறுதி

    October 5, 2025
    மாநிலம்

    தவறான வழியில் அழைத்து சென்றவரை அடையாளம் காட்டிய கரூர் துயரம்: திமுக

    October 5, 2025
    மாநிலம்

    “கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் இருந்து முதல்வர் பின்வாங்கியது ஏன்?” – குஷ்பு

    October 5, 2025
    மாநிலம்

    பேரவைக் கூட்ட நாட்களை முடிவு செய்ய அலுவல் ஆய்வுக்குழு அக்.13-ம் தேதி கூடுகிறது

    October 5, 2025
    மாநிலம்

    தமிழகத்தை கபளீகரம் செய்ய நினைக்கும் பாஜக, அதிமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    October 5, 2025
    மாநிலம்

    அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

    October 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கை வந்த பிறகு பேசுவோம்: செந்தில் பாலாஜி உறுதி
    • பிக் பாஸ் சீசன் 9 தொடக்கம்: போட்டியாளர்களின் முழு பட்டியல்!
    • தவறான வழியில் அழைத்து சென்றவரை அடையாளம் காட்டிய கரூர் துயரம்: திமுக
    • “கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் இருந்து முதல்வர் பின்வாங்கியது ஏன்?” – குஷ்பு
    • பேரவைக் கூட்ட நாட்களை முடிவு செய்ய அலுவல் ஆய்வுக்குழு அக்.13-ம் தேதி கூடுகிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.