Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, October 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»ரஜினியை மனதில் வைத்து எழுதிய கதை: ‘ட்யூட்’ இயக்குநர்
    சினிமா

    ரஜினியை மனதில் வைத்து எழுதிய கதை: ‘ட்யூட்’ இயக்குநர்

    adminBy adminOctober 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரஜினியை மனதில் வைத்து எழுதிய கதை: ‘ட்யூட்’ இயக்குநர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ரஜினியை மனதில் வைத்து எழுதிய கதை தான் ‘ட்யூட்’ என்று இயக்குநர் கீர்த்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்யூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதுவரை 3 பாடல்களை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தினை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கி இருக்கிறார். இவர் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘ட்யூட்’ குறித்து இயக்குநர் கீர்த்தீஸ்வரன், “என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் ‘ட்யூட்’ படத்தின் கதை சொன்னேன். அவர்களுக்கும் கதை உடனே பிடித்து போனதால் பட வேலைகள் தொடங்கினோம். ‘ட்யூட்’ படத்தின் கதை எழுதத் தொடங்கியபோதே ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி இந்தக் கதையில் நடித்திருப்பார் என மனதில் வைத்துதான் எழுதினேன். அதில் பிரதீப் ரங்கநாதன் பொருந்திப் போயிருக்கிறார். பிரதீப்புக்கும் கதை பிடித்ததால் ஒத்துக் கொண்டார்.

    படத்தில் பிரதீப் – மமிதா இருவரும் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்துவார்கள். முழுக்க முழுக்க சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். காதல் கதை மட்டுமல்லாது, கதையில் ஒரு மாஸ் இருக்கும். அது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். இயக்குநராக என்னுடைய முதல் படமே தீபாவளிக்கு வெளியாவது என் கனவு நனவாகியது போல உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

    நாயகி மமிதா பைஜு தேர்வு குறித்து கீர்த்தீஸ்வரன், “இந்தப் படத்திற்கு மமிதாவை நான் சொன்னபோது அவரின் ‘பிரேமலு’ படம் கூட வெளியாகவில்லை. ‘சூப்பர் சரண்யா’ படம் பார்த்துதான் அவரை தேர்ந்தெடுத்தோம். மமிதா கதைக்குள்ளே வந்தவுடன் ‘ரஜினி- ஸ்ரீதேவி’ இணைந்து நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி படம் வந்திருக்கிறது எனத் தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், “காஸ்ட்யூம், லொகேஷன், விஷுவல் என எல்லாவற்றிலும் பார்த்து பார்த்து உழைத்திருக்கிறோம். என்னுடைய டெக்னிக்கல் டீம் படத்திற்கு மிகப்பெரிய பலம். புதிதாக இசையில் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் சாய் அபயங்கர். அவரது இசையும் நன்றாக வந்திருக்கிறது. இயக்குநர், கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர் என அனைவரும் இளம் தலைமுறையினர் என்பதால் இது ஜென் ஸீ படமா என பலர் கேட்கின்றனர். இந்தக் காலத்து இளைஞர்களும் குடும்ப பார்வையாளர்களும் பார்த்து கொண்டாடும் வகையில் எண்டர்டெயின்மெண்ட்டாக படம் இருக்கும். பிரதீப், மமிதாவுடன் நடிகர்கள் சரத்குமார், ரோகிணி, பரிதாபங்கள் புகழ் டேவிட் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரதீப் படத்தில் வழக்கமாக நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இதில் இருக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் கீர்த்தீஸ்வரன்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    80, 90-களின் திரைப் பிரபலங்கள் பங்கேற்ற ரீ-யூனியன் நிகழ்வு!

    October 5, 2025
    சினிமா

    மும்பையில் புது வீட்டில் குடியேறினார் சமந்தா

    October 5, 2025
    சினிமா

    ஒரு வார கால பயணமாக இமயமலை சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

    October 5, 2025
    சினிமா

    மீண்டும் இணைகிறது விஷால் – சுந்தர்.சி கூட்டணி!

    October 5, 2025
    சினிமா

    குழந்தைகளுக்காக உருவான ‘கிகி அண்ட் கொகொ’

    October 5, 2025
    சினிமா

    நயன்தாரா படத்தில் வில்லனாகும் ஷைன் டாம் சாக்கோ

    October 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்
    • சுகாதார உதவிக்குறிப்புகள்: 5 மிகவும் பொதுவானது அல்ல, தேவையான சுகாதார உதவிக்குறிப்புகள் அன்ஷுலா கபூர் சத்தியம் செய்கிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘அரட்டை’ செயலி: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? – A to Z கைடன்ஸ்
    • கம்பீருக்கு ‘ஆமாஞ்சாமி’ போட்டால் அணியில் தேர்வு: ஸ்ரீகாந்த் சரமாரி சாடல்
    • ‘18 எம்எல்ஏக்களை அரசியல் அநாதையாக்கியவர் டிடிவி தினகரன்’ – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.