Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, October 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தீவிரம்
    மாநிலம்

    உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தீவிரம்

    adminBy adminOctober 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தீவிரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகள் மற்றும் சாலை பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தினேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார் கடந்த 3-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கரூரில் பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தபோது, சம்பவ இடத்தில் இருந்த கட்சித் தலை வரும், பிற நிர்வாகிகளும் தங்களுக்கும், நடந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல நடந்துகொண்டுள்ளனர். நெரிசலில் சிக்கியவர்களுக்கோ, தங்களது ஆதரவாளர்களுக்கோ அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலோ, ஆறுதலோ தெரிவிக்கவில்லை. பொறுப்பற்ற முறையில் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து நழுவிச் சென்றது கடும் கண்டனத்துக்குரியது.

    குறைந்தபட்சம் தன்னை பார்க்க வந்தவர்கள் பரிதாபமாக உயிரிழந்த துயரத்துக்கு விஜய் சமூக வலைதளத்திலாவது உடனடியாக தனது அனுதாபம், வருத்தத்தை கட்சி சார்பில் தெரிவித்திருக்கலாம். அவர்களது இந்த பொறுப்பற்ற செயல்பாடு, மனித உயிர்களை குறைவாக மதிப்பிடும் ஆபத்தான அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கிறேன். விஜய் பயணம் செய்த பிரச்சாரப் பேருந்தின் உள்ளே, வெளியே மற்றும் சம்பவ இடத்தில் இருந்த அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணையை இந்த குழு உடனே தொடங்க வேண்டும். சம்பவத்தில் தொடர்புடைய விஜய்யின் பிரச்சார வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியிருந்தார்.

    இதையடுத்து, விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை பனையூரில் நிறுத்தப்பட்டுள்ள அந்த வாகனம் எந்த நேரத்திலும் பறிமுதல் செய்யப்படலாம் என தெரிகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘கலைஞர் பல்கலை’ மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல்

    October 5, 2025
    மாநிலம்

    திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    October 5, 2025
    மாநிலம்

    ம.பி.யில் குழந்தைகள் இறப்பு: இருமல் மருந்தை தமிழகத்தில் விற்பனை செய்ய தடை

    October 5, 2025
    மாநிலம்

    தாயுமானவர் திட்டத்தில் 2 நாள் ரேஷன் பொருள் விநியோகம்

    October 5, 2025
    மாநிலம்

    அழைப்பிதழ் கொடுக்கவா… கூட்டணிக்கு அழைக்கவா..? – சி.வி.சண்முகம் மூலம் ராமதாஸுக்கு சேதி அனுப்பிய பாஜக!

    October 5, 2025
    மாநிலம்

    பழனிசாமியின் நாமக்கல் பிரச்சாரம் 3-ம் முறையாக ஒத்திவைப்பு: காவல் துறை அனுமதி மறுப்பு

    October 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முதல்நிலை தேர்வு முடிந்தவுடன் விடை குறிப்புகள் வெளியிட யுபிஎஸ்சி முடிவு
    • நவக்கிரக தோஷம் போக்கும் குடந்தை ஸ்ரீபகவத் விநாயகர்: ஞாயிறு தரிசனம்
    • பிரபல சுகாதார நிபுணர் தொப்பை கொழுப்பை உருகுவதற்கும் 15 நாட்களில் உடல் எடையை குறைப்பதற்கும் 10 சரியான வழிகளை அறிவுறுத்துகிறார்
    • பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை
    • புரட்டாசி 3-வது சனிக்கிழமையில் திருமலையில் குவிந்த பக்தர்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.