Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, October 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூத்துக்குடியில் நவ.15-ல் ‘கடல் அம்மா’ மாநாடு: கடலுக்குச் சென்று பார்வையிட்ட பின் சீமான் தகவல்
    மாநிலம்

    தூத்துக்குடியில் நவ.15-ல் ‘கடல் அம்மா’ மாநாடு: கடலுக்குச் சென்று பார்வையிட்ட பின் சீமான் தகவல்

    adminBy adminOctober 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூத்துக்குடியில் நவ.15-ல் ‘கடல் அம்மா’ மாநாடு: கடலுக்குச் சென்று பார்வையிட்ட பின் சீமான் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தூத்துக்குடி: ‘கடலையும், கடல் வாழ் உயிரினங்களையும் எப்படி பாதுகாத்திடுவது என்பது குறித்து தூத்துக்குடியில் வரும் நவ.15-ம் தேதி கடல் அம்மா மாநாடு நடத்துகிறோம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் வரும் நவ.15-ம் தேதி கடல் அம்மா மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை திருச்செந்தூர் அமலி நகர் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த மீனவர்களது படகில் சீமான் நடுக்கடலுக்கு சென்று பார்வையிட்டார்.

    தொடர்ந்து சிமான் செய்தியாளர்களிடம் கூறியது: “கடலையும், கடல் வாழ் உயிரினங்களையும் எப்படி பாதுகாத்திடுவது என்பது குறித்து தூத்துக்குடியில் வரும் நவ.15-ம் தேதி கடல் அம்மா மாநாடு நடத்துகிறோம். ஏற்கெனவே மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு நடந்தது. கரூர் சம்பவத்தால் அந்த செய்தி மக்களிடம் போய் சேரவில்லை. எனவே கடல் அம்மா மாநாட்டுக்கான ஆலோசனை பயணம் தான் இது. அமலிநகரில் படகில் சென்று கடலில் பார்வையிட்டோம்.

    அணு உலை, ஸ்டெர்லைட் போன்ற ஆலைக்கழிவு, சாயக்கழிவுகள் என எல்லா கழிவுகளும் கடலில் தான் கலக்கிறது. அணு உலையை குளிர்விக்க பயன்படுத்தும் கடல் நீரே கடல் வாழ் உயிரினங்களை நச்சாக்குகிறது. அணு உலைக்கெதிராக போராடியும், மூட முடியவில்லை. ஆனாலும் அந்த பேராபத்தை உணர்த்துகிறோம். அமலிநகர் கடலில் அரிப்புக்கு காரணம் அனல்மின் நிலைய துறைமுகம் தான் என சகோதரர்கள் கூறுகின்றனர்.

    தவெக தலைவர் விஜய்க்கு இசட் பிரிவு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுவதாக கேட்பதால் கொடுக்கின்றனர். கருர் நிகழ்வில் அவருக்கு பாதுகாப்பு இருந்தது. மக்களுக்கு தான் பாதுகாப்பில்லை. நாங்கள் பாதுகாப்பு கேட்டாலும் கொடுப்பதில்லை. கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அறிவுறுத்தியது தொடர்பாக சட்ட முடிவுகள் குறித்து கருத்து கூற முடியாது. இந்த நிகழ்வுகளை தவிர்க்க அரசியல் கட்சிகள் ஒரு இடத்தை வாங்கி அங்கு வைத்து கூட்டம் நடத்திக் கொள்ளலாம். தெருக்களில் போவது நெரிசலை தான் ஏற்படுத்தும். மேலை நாடுகளைப் போல ஒவ்வொரு தலைவருக்கும் ஓரே இடத்தில் நேரம் ஒதுக்கி பரப்புரையை கொண்டு வரலாம்.

    விஜய்யை காப்பாற்றுவது என பாஜக நிலைப்பாடு எடுத்துள்ளது. விஜய் கரூர் பரப்புரைக்கு வந்ததால் தான் அந்த கூட்டம். அதனால் அவர் தான் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதை விட்டு விட்டு அரசு, காவல்துறை மீது பழிபோட்டு விட்டு, எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறுவதால் தான் சிக்கல் ஏற்படுகிறது. இருவரும் தான் பொறுப்பு. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பழி சுமத்துவது உயரிழப்பு சம்பவத்தை விட கொடுமையாக உள்ளது.

    பாஜக விஜயை கூட்டணிக்குள் கொண்டு வரப்பார்க்கிறது. அதிமுகவும் அதே கூட்டணியில் உள்ளதால் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறது. இந்தி மும்மொழிக் கொள்கை. திராவிடம் இரு மொழிக்கொள்கை. தமிழ் தேசியத்துக்கு தமிழ் மொழிக்கொள்கை மட்டுமே.

    நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். கோட்பாட்டை கொண்டு அடகு வைக்க மாட்டோம். பிரதமர் பதவியை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சுழற்சி முறையில் வழங்க வேண்டும். குஜராத்தை சேர்ந்தவரே 3 முறை பிரதமராக உள்ளார். முதல்வர் பதவி அதிகாரமற்ற பதவி என்றால் எதற்கு ரூ.5 ஆயிரம் கோடி, ரூ. 6 ஆயிரம் கோடி தேர்தலில் செலவு செய்து பதவிக்கு வரவேண்டும்” என்று சீமான் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அழைப்பிதழ் கொடுக்கவா… கூட்டணிக்கு அழைக்கவா..? – சி.வி.சண்முகம் மூலம் ராமதாஸுக்கு சேதி அனுப்பிய பாஜக!

    October 5, 2025
    மாநிலம்

    பழனிசாமியின் நாமக்கல் பிரச்சாரம் 3-ம் முறையாக ஒத்திவைப்பு: காவல் துறை அனுமதி மறுப்பு

    October 5, 2025
    மாநிலம்

    தமிழர் அடையாளமான கல் மண்டபங்களை அரசு புதுப்பித்து மறுசீரமைக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

    October 4, 2025
    மாநிலம்

    உயிரிழந்த நிர்வாகிக்கு பதவி – ஈரோடு மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி!

    October 4, 2025
    மாநிலம்

    சென்னை வண்ணாரப்பேட்டை ரயில்வே குடியிருப்பில் வசிப்போரை அப்புறப்படுத்தும் முடிவுக்கு எஸ்ஆர்எம்யு கண்டனம்

    October 4, 2025
    மாநிலம்

    அதிமுகவும், பாஜகவும் தமிழக வளர்ச்சியை கபளீகரம் செய்ய பார்க்கின்றன: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    October 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் சம்பவம்: ‘ஜனநாயகன்’ திட்டத்தில் மாற்றம்
    • அழைப்பிதழ் கொடுக்கவா… கூட்டணிக்கு அழைக்கவா..? – சி.வி.சண்முகம் மூலம் ராமதாஸுக்கு சேதி அனுப்பிய பாஜக!
    • நாக் அஸ்வின் இயக்கத்தில் சாய் பல்லவி?
    • பழனிசாமியின் நாமக்கல் பிரச்சாரம் 3-ம் முறையாக ஒத்திவைப்பு: காவல் துறை அனுமதி மறுப்பு
    • தமிழர் அடையாளமான கல் மண்டபங்களை அரசு புதுப்பித்து மறுசீரமைக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.