சென்னை: கடந்த மாதம் 1.01 கோடி பயணச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் 1 கோடியே 1 லட்சத்து 46,769 முறை பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக செப்.4-ம் தேதி 3 லட்சத்து 97,217 முறை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்காரச் சென்னை அட்டையைப் பயன்படுத்தி 51 லட்சத்து 96,904 பயணிகள், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 1 லட்சத்து 15,651 பயணிகள், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 48 லட்சத்து 34,214 பயணிகள், வாட்ஸ்-ஆப் மூலம் 5 லட்சத்து 65,381 பயணிகள் பயணித்துள்ளனர்.