Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, October 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»யூடியூபர் மாரிதாஸ் கைது – கரூர் சம்பவம் குறித்து அவதூறு பரப்பியதாக நடவடிக்கை!
    மாநிலம்

    யூடியூபர் மாரிதாஸ் கைது – கரூர் சம்பவம் குறித்து அவதூறு பரப்பியதாக நடவடிக்கை!

    adminBy adminOctober 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    யூடியூபர் மாரிதாஸ் கைது – கரூர் சம்பவம் குறித்து அவதூறு பரப்பியதாக நடவடிக்கை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசின் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சென்னை, நீலாங்கரையில் உள்ள வீட்டில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.

    முன்னதாக மாரிதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று மாலை: நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியிடப்படும். 10 ரூபா பாலாஜி.. விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன – மாலை 6 மணிக்கு..” என்று பதிவிட்டிருந்தார். விஜய் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தார். அந்த ட்வீட்டைப் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே, ”என் இல்லத்திற்கு காவல் துறை கைது செய்ய வந்துள்ளது.” என்றும் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

    கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் அதி​க​மானோர் படு​கா​யம் அடைந்​தனர். இதை தொடர்ந்​து, அரசி​யல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்​வு​களுக்கு தடை விதிக்க வேண்​டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்​தில் வில்​லி​வாக்​கத்தை சேர்ந்த பி.ஹெச்​.​தினேஷ் என்​பவர் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

    நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, நீதிபதி செந்தில்குமார், “கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். இதுதொடர்​பான காணொளி​கள் வேதனை அளிக்​கின்​றன. இந்த வழக்​கில் 2 பேர் மட்​டும் கைது செய்யப்பட்​டுள்​ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது? அனைத்​தை​யும் தமிழக அரசு அனு​ம​தித்​திருப்​பது அதிருப்தி அளிக்​கிறது.

    கரூரில் நடந்​துள்ள சம்​பவம் மனிதர்​களால் உரு​வாக்​கப்​பட்ட பேரழி​வு. நீதி​மன்​றம் இதை கண்​மூடி வேடிக்கை பார்த்​துக் கொண்டு இருக்​காது. பொறுப்பை யாரும் தட்​டிக்​கழிக்க முடி​யாது. பிரச்​சா​ரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்​பட்​டு, பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராள​மானோர் உயி​ரிழந்த நிலை​யில், கட்சித் தொண்​டர்​களை​யும், ரசிகர்​களை​யும் பொறுப்​பற்ற முறை​யில் கைவிட்​டு​விட்டு தவெக தலை​வர் விஜய் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் ஓடி​யுள்​ளனர். அவர்​களுக்கு தலை​மைப் பண்பு இல்​லை. சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்​காதது கண்​டனத்​துக்​குரியது.” என்று கூறி வழக்கை நீதிபதி முடித்​து​வைத்​தார்.

    இந்நிலையில், இது பற்றி வீடியோ வெளியிடுவதாக மாரிதாஸ் கூறியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் விவ​காரம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் வதந்தி பரப்​பிய​தாக பாஜக கலை மற்​றும் கலாச்​சார பிரிவு மாநில செய​லா​ளர் சகா​யம் (38), தவெக மாங்​காடு உறுப்​பினர் சிவனேசன் (36), அதே கட்​சி​யின் ஆவடி வட்​டச் செய​லா​ளர் சரத்​கு​மார் (32), யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு உள்ளிட்டோரை சென்னை போலீ​ஸார் கைது செய்​திருந்தனர். தற்போது அந்த வரிசையில் மாரிதாஸும் இணைந்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் துயரம்: ஒரு வாரத்துக்குப் பின் தவெக சார்பில் நேரில் ஆறுதல்

    October 4, 2025
    மாநிலம்

    திருப்பூர் குமரனையும், சுப்பிரமணிய சிவாவையும் நினைவுகூர்ந்து வணங்குவோம்: பிரதமர் மோடி

    October 4, 2025
    மாநிலம்

    சென்னை மெட்ரோ ரயில் கடந்த மாதம் 1.01 கோடி பயணச்சீட்டுகள் விற்பனை

    October 4, 2025
    மாநிலம்

    ‘விஜய் வீட்டில் முடங்கிக் கிடப்பது சரியல்ல; கைதுக்கு பயந்தால் அரசியல் செய்ய முடியாது’ – கிருஷ்ணசாமி

    October 4, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

    October 4, 2025
    மாநிலம்

    விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது: சீமான்

    October 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் துயரம்: ஒரு வாரத்துக்குப் பின் தவெக சார்பில் நேரில் ஆறுதல்
    • உலகெங்கிலும் இருந்து ஐந்து சக்திவாய்ந்த குணப்படுத்தும் ஹனிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எல்னாஸ் ஹஜ்தாமிரி கடத்தல் வழக்கு: டெக்சாஸில் கைது செய்யப்பட்ட இந்திய -ஆரிஜின் சுக்பிரீத் சிங் கனடாவுக்கு ஒப்படைக்கப்பட்டார் – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருப்பூர் குமரனையும், சுப்பிரமணிய சிவாவையும் நினைவுகூர்ந்து வணங்குவோம்: பிரதமர் மோடி
    • நிலை 4 நுரையீரல் புற்றுநோய் எச்சரிக்கை அறிகுறிகள்: மூளை, எலும்பு, கல்லீரல் மற்றும் அட்ரீனல் மெட்டாஸ்டாஸிஸ் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.