Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, October 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும்: அதிகாரிகள்  தகவல்
    மாநிலம்

    தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும்: அதிகாரிகள்  தகவல்

    adminBy adminOctober 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும்: அதிகாரிகள்  தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இரண்டு தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் அடுத்த மாதம் இறு​திக்​குள் பயன்​பாட்​டுக்கு வரும் என, ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்னை ஐ.சி.எஃப் ஆலை​யில் தற்​போது அதிவேக ரயி​லான வந்தே பாரத் ரயில் தயாரிப்​பில் கவனம் செலுத்​தப்​படு​கிறது. இது​வரை, 60-க்​கும் மேற்​பட்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது.

    இதையடுத்​து, அம்​ரித் பாரத் ரயில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ உட்பட பல்​வேறு வகை​களில் வந்தே பாரத் ரயில்​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன. அதி​லும், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​களை தயாரித்​து, இரவு நேரங்​களில் இயக்க ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது.

    அதன்​படி, கர்​நாடக மாநிலம் பெங்​களூரில் உள்ள பிஇஎம்​எல் நிறு​வனத்​தில், முதல் தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி​கள் முடிந்​து, கடந்த ஆண்டு அக்​டோபரில் சென்னை ஐ.சி.எஃப். ஆலைக்கு வந்​தது. இந்த வந்தே பாரத் ரயி​லில், 16 ‘ஏசி’ பெட்​டிகள் இருக்​கின்​றன. பயணி​களை கவரும் வகை​யில் ஆரஞ்சு, மஞ்​சள் நிறங்​களில் உள்​அலங்​காரம் செய்யப்பட்டுள்ளது.

    பல்​வேறு கட்ட ஆய்​வுக்கு பிறகு, இந்த தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எஃப். ஆலை​யில் இருந்து டில்​லிக்கு அனுப்​பப்​பட்​டது. 10 மாதங்​கள் கடந்​துள்ள நிலை​யில் தூங்​கும் வந்தே பாரத் ரயில் இன்​னும் பயன்​பாட்​டுக்கு வராதது, பயணி​களிடம் ஏமாற்​றத்தை அளித்​துள்​ளது. இந்​நிலை​யில், அடுத்த மாதம் இறு​தி​யில் இந்த ரயிலை பயன்​பாட்​டுக்கு கொண்டு வர ரயில்வே நிர்​வாகம் நடவடிக்கை எடுத்​துள்​ளது.

    இது குறித்​து, ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், பயணி​களை வெகு​வாக கவரும் வகை​யில், தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. மணிக்கு 180 கி.மீ. வரை வேக​மாக செல்​லும் திறன் கொண்​டது. பயணி​கள் வசதிக்​காக, ரயில் பெட்​டி​யின் உள்​பகு​தி​யில் சில மாற்​றங்​களும் செய்​யப்​பட்​டது.

    நீண்ட துாரம் செல்​லும் தடத்​தில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயா​ராக உள்​ளது. 2-வது ரயில், தயாரிப்பு பணி​யும் முடிந்​து, அக். 15-க்​குள் வந்து விடும். எனவே, இரண்டு வந்தே பாரத் ரயில்​களும் அடுத்த மாதம் இறு​திக்​குள் பயன்​பாட்​டுக்கு கொண்டுவர ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘விஜய் வீட்டில் முடங்கிக் கிடப்பது சரியல்ல; கைதுக்கு பயந்தால் அரசியல் செய்ய முடியாது’ – கிருஷ்ணசாமி

    October 4, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

    October 4, 2025
    மாநிலம்

    விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது: சீமான்

    October 4, 2025
    மாநிலம்

    விஜய் கைது செய்யப்படுவாரா? – அமைச்சர் துரைமுருகன் பதில்

    October 4, 2025
    மாநிலம்

    திமுக எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 4, 2025
    மாநிலம்

    யூடியூபர் மாரிதாஸ் கைது – கரூர் சம்பவம் குறித்து அவதூறு பரப்பியதாக நடவடிக்கை!

    October 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘விஜய் வீட்டில் முடங்கிக் கிடப்பது சரியல்ல; கைதுக்கு பயந்தால் அரசியல் செய்ய முடியாது’ – கிருஷ்ணசாமி
    • இது பிடிப்புகள் மட்டுமல்ல: காலங்களில் ஒரு பெண்ணின் மூளை எப்படி மாறுகிறது – இந்தியாவின் டைம்ஸ்
    • ஜெஃப் பெசோஸ் தைரியமான கணிப்பை செய்கிறார்: அடுத்த தரவு மையங்கள் விண்வெளியில் கட்டப்படும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிவன்மலை முருகன் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ கண்ணாடிப் பேழையில் கடல் நீர் வைத்து பூஜை
    • வானிலை முன்னறிவிப்பு: திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.