சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் பீன்ஸ், நூக்கல், கோஸ் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த 2 மாதங்களாக காய்கறி விலை குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சில காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் மொத்த விலையில்
கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் கிலோ ரூ.60 ஆகவும், ரூ.15-க்கு விற்கப்பட்ட நூக்கல் ரூ.30 ஆகவும், ரூ.5-க்கு விற்கப்பட்ட முட்டைக்கோஸ் ரூ.10 ஆகவும் உயர்ந்துள்ளது.
விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகள் கூறும்போது, “தற்போது புரட்டாசி மாதம் என்பதால் அசைவம் தவிர்த்து, சைவ உணவுகள் அதிகம் உண்ணப்படுவதால், காய்கறிகள் அதிகமாக வாங்கப்படுகின்றன. இதனால் விலை உயர்ந்துள்ளது என்று கூறினார்.