Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, October 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“பயப்படுறீங்க… இருக்கட்டும்!” – கரூர் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு பழனிசாமி பதில்
    மாநிலம்

    “பயப்படுறீங்க… இருக்கட்டும்!” – கரூர் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு பழனிசாமி பதில்

    adminBy adminOctober 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பயப்படுறீங்க… இருக்கட்டும்!” – கரூர் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு பழனிசாமி பதில்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை? வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை? அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா?” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    முன்னதாக இன்று காலை ராமநாதபுரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கரூர் பிரச்சினையில், அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா எனப் பார்க்கிறார்கள் என்று பாஜகவையும், ஊர் ஊராக சென்று தங்கள் கூட்டணி யாராவது வருவார்களா என பழனிசாமி பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று அதிமுகவையும் விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்தை பகிர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி, “தமிழக முதல்வர், ராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன் ஒருமுறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம். அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து அவரே கேட்க வேண்டியது. கச்சத்தீவைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியில் 39 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் பேசாமல், இப்போது வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் உங்கள் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

    கச்சத்தீவைத் தாரை வார்த்தவர் உங்கள் தந்தை கருணாநிதி. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது, இன்று நீங்கள் கைகோர்த்து நிற்கும் காங்கிரஸ் கட்சி. கச்சத்தீவு பற்றி சண்டை போடவேண்டும் என்றால், உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளுங்கள்.

    கரூர் துயரத்தின்போது அவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் எல்லாம் ஏன் அப்போது அங்கே செல்லவில்லை? இது அரசியல் தானே? என்று வீராவேசமாகப் பேசும் முதல்வரே… நான் கேட்கிறேன். கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை? வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை? அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா?

    ஆட்சி நிர்வாகத்தில் தோல்வி, நிதி நிர்வாகத்தில் தோல்வி, சட்டம் ஒழுங்கைக் காப்பதில் தோல்வி, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் தோல்வி, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி, என மக்களை நாள்தோறும் வாட்டி வதைக்கும் உங்கள் தோல்வி மாடல் திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே , எங்கள் கூட்டணியின் கொள்கைக்கான அடிப்படை.

    உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதால், தமிழக மக்களின் நலனும், மாணவர்களின் எதிர்காலமும், பெண்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்பதே எங்கள் கூட்டணிக்கான பொதுக் காரணம். இதை விட ஒரு வலுவான, மக்கள் நலன் சார்ந்த அடிப்படைக் காரணம் தேவையா என்ன? உங்களைப் போல் அல்லாமல், “கூட்டத்திற்கு கூட்டம், மேடைக்கு மேடை, தெருவுக்கு தெரு” என்று நான் மக்களோடு தான் இருக்கிறேன் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள். அதற்கு நன்றி.

    உங்கள் ஆட்சியின் தவறுகளைச் சொன்னால், பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினால், அதிலும் நீங்கள் அரசியல் செய்யும் அவலத்தை தோலுரித்தால், அது உங்கள் கண்ணுக்கு கூட்டணிக் கணக்காக தெரிகிறது என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்வது? சரி… பயப்படுறீங்க… இருக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “நான் என்ன தவெகவின் மார்க்கெட்டிங் ஆபிசரா?” – அண்ணாமலை திடீர் கோபம்

    October 3, 2025
    மாநிலம்

    ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

    October 3, 2025
    மாநிலம்

    கரூர் நெரிசல் உயிரிழப்பு தொடர்பான மனுக்கள் மீது உயர் நீதிமன்றம் இன்று விசாரணை

    October 3, 2025
    மாநிலம்

    “3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் ஒரு தலைவராக முடியாது” – கரூரில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி காட்டம்

    October 3, 2025
    மாநிலம்

    கரூர் துயரம்: ஆளுக்கொரு திசையில் ‘அரசியல்’ – நடப்பது என்ன?

    October 3, 2025
    மாநிலம்

    “விஜய் பொது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்” – வேல்முருகன் கருத்து

    October 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “நான் என்ன தவெகவின் மார்க்கெட்டிங் ஆபிசரா?” – அண்ணாமலை திடீர் கோபம்
    • ஒளிரும் சருமத்திற்கு உடல் மெருகூட்டல்: ஜெனரல் இசைக்கு பிடித்த தோல் பராமரிப்பு ஹேக் செய்யும் நன்மைகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி’ – ஹமாஸுக்கு ட்ரம்ப் கெடு
    • ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
    • பாபுகோஷா வெர்சஸ் நாஷ்பதி: செரிமான ஆரோக்கியம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் வைட்டமின் சி நன்மைகளை ஒப்பிடுதல் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.