Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, October 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ம.பி.யில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு
    தேசியம்

    ம.பி.யில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

    adminBy adminOctober 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ம.பி.யில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    போபால்: மத்திய பிரதேசத்​தில் 2 வெவ்​வேறு இடங்​களில் துர்கா சிலைகளை கரைக்​கும் நிகழ்ச்​சி​யில் 10 சிறு​வர்​கள் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். நாடு முழு​வதும் நவராத்​திரி விழா​வின் இறுதி நாளான நேற்று விஜயதசமி கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, மத்​திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே இங்​கோரியா நகரில் இருந்து துர்கா சிலைகளை கரைப்​ப​தற்​காக நேற்று டிராக்​டரில் எடுத்​துச் சென்​றுள்​ளனர்.

    அந்த டிராக்​டரில் சிறு​வர்​களும் பயணித்​துள்​ளனர். சம்​பல் நதி​யின் மீது உள்ள பாலத்​தின் மீது டிராக்​டர் நிறுத்​தப்​பட்​டது. அப்​போது 12 வயது சிறு​வன் திடீரென இன்​ஜினை ஆன் செய்​த​தால் வாக​னம் திடீரென முன்​னேறி சம்​பல் நதி​யில் விழுந்​த​தாக கூறப்​படு​கிறது.

    இதில் 12 சிறு​வர்​கள் தண்​ணீரில் விழுந்த நிலை​யில், 11 பேர் மீட்​கப்​பட்​டனர். ஒரு​வரை காண​வில்​லை. காணா​மல் போன சிறு​வனை போலீ​ஸாரும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் தேடி வருகின்றனர். மீட்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது​போல காந்த்வா மாவட்​டம், பந்​தனா நகருக்கு அருகே உள்ள அர்த்லா மற்​றும் ஜம்லி கிராமங்​களைச் சேர்ந்த சுமார் 30 பேர் துர்கா சிலைகளை நீர்​நிலைகளில் கரைக்க டிராக்​டரில் சென்​றுள்​ளனர்.

    அப்போது அந்த டிராக்டர் அருகில் இருந்த ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மாநில பேரிடர் மீட்புப் படையினர் 8 சிறுமிகள் உட்பட 11 பேரின் சடலங்களை மீட்டனர். கிரேன் உதவியுடன் அந்த டிராக்டரை மீட்ட அவர்கள், காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதிக சுமைகாரணமாக அந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் சிக்கி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    முதல்​வர் இரங்​கல்: இந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு முதல்​வர் மோகன் யாதவ் இரங்​கல் தெரி​வித்​துள்​ளார். மேலும் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்​பீடு வழங்​கப்​படும் என்​றும், காயமடைந்​தவர்​களுக்கு தரமான சிகிச்சை வழங்​கப்​படும் என்​றும் உறுதி அளித்​துள்​ளார்.

    “காயமடைந்​தவர்​கள் விரை​வில் குணமடைய வேண்​டும் என்​றும் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்​கு மன உறு​தியை வழங்​க வேண்​டும்​ என்​றும்​ துர்​கா தேவி​யிடம்​ பி​ரார்​த்திக்​கிறேன்​” என்றும்​ தெரி​வித்​துள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சீனாவின் முட்டுக்கட்டையை முறியடிக்க இந்தியாவிலேயே சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் உற்பத்தி: ஜெர்மனி தூதர் அறிவிப்பு

    October 3, 2025
    தேசியம்

    குரு நானக் ஜெயந்தி வழிபாடு: சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்ல அனுமதி

    October 3, 2025
    தேசியம்

    மோகன் பாகவத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு

    October 3, 2025
    தேசியம்

    டெல்லி போலி சாமியாரின் சர்வதேச பாலியல் மோசடி அம்பலம்

    October 3, 2025
    தேசியம்

    கொல்லப்பட்டதாக கருதிய பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு

    October 3, 2025
    தேசியம்

    இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது: வெளிநாட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி விமர்சனம்

    October 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘ஆசியாவின் 2-வது சிறந்த அணி நாங்கள்தான் என்று கூறவில்லை’ – ஆப்கன் கேப்டன் ரஷீத் கான்
    • ஆர்எஸ்எஸ் பற்றிய பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழக பாஜக
    • உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு சக்தி இந்தியா: நிர்மலா சீதாராமன்
    • தொடர்ச்சியான UTIS சிறுநீரக புற்றுநோயின் அடையாளம்: அமைதியான அறிகுறிகள், மறைக்கப்பட்ட அபாயங்கள் மற்றும் ஒரு மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாணவர்களை வெற்றியாளர்களாக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.