Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, October 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷா சூரசம்ஹாரம் – ‘ஓம் காளி, ஜெய்காளி’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
    ஆன்மீகம்

    குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷா சூரசம்ஹாரம் – ‘ஓம் காளி, ஜெய்காளி’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

    adminBy adminOctober 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷா சூரசம்ஹாரம் – ‘ஓம் காளி, ஜெய்காளி’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் நடைபெற்றது. விரதம் கடை பிடித்து வேடம் அணிந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    தசரா திருவிழா: இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா மிகவும் விமரிசியைாக நடைபெறும். இக்கோயிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து கடந்த 10 நாட்களாக வீதி தோறும் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர்.

    குலசேகரன்பட்டினம் கோயிலில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மகிஷா சூரசம்ஹாரம்: விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நள்ளிரவு கோயில் அருகே உள்ள கடற்கரையில் நடந்தது. இதை காண நேற்று மாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் குலசேகரன் பட்டினத்துக்கு வரத் தொடங்கினர். சுவாமி தரிசனம் செய்ய வசதியாக கோயிலில் பக்தர்கள், தசரா குழுவினர் செல்வதற்கு தனியாக பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. குலசேகரன்பட்டினம் புறவழிச் சாலையின் அருகில் உள்ள தருவைகுளம் நேற்று காலை முதலே வாகனங்களால் நிரம்பியது.

    தசரா திருவிழாவில் 10-ம் நாளில், காலை 6 மணி, மற்றும் 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், 10.30 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரரேஸ்வரர் கோயில் முன்பாக அம்மன் எழுந்தருளி பல்வேறு வேடங்களில் வந்த மகிஷாசூரனை வதம் செய்தார்.

    அப்போது கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர ‘தாயே முத்தாரம்மா’, ‘ஓம் காளி, ஜெய்காளி’, ‘வெற்றி அம்மனுக்கே’ என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். பின்னர் கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில், அபிஷேக மேடை மற்றும் கோயில் கலையரங்கில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

    நாளை நிறைவு: நாளை (அக்.3ம் தேதி) காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப் பரத்தில் திருவீதியுலா புறப்படுகிறார். மாலை 4 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு அவிழ்த்து தங்கள் வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர். நாளை நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறு கிறது.

    தசரா விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. குலசேகரன்பட்டினத்தில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேற்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமையில் 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

    October 2, 2025
    ஆன்மீகம்

    குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்: தசரா திருவிழாவில் நாளை மகிஷாசூர சம்ஹாரம்!

    October 1, 2025
    ஆன்மீகம்

    பரமேஸ்வரி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு

    October 1, 2025
    ஆன்மீகம்

    ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

    October 1, 2025
    ஆன்மீகம்

    திருப்பதி பிரம்மோற்சவம் 7-ம் நாள் விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் பவனி

    October 1, 2025
    ஆன்மீகம்

    ஏழுமலையானுக்கு அனைவரும் சமம்: தேரின் உச்சியில் சவர தொழிலாளர்களின் தங்க குடையுடன் உலா

    October 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “என் ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” – அஜித் நெகிழ்ச்சி
    • மத்திய அரசு நிதி வழங்கியதை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் மீண்டும் இலவச மாணவர் சேர்க்கை
    • மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘அதர்ஸ்’ – நவம்பர் 7 வெளியீடு
    • 5 ஆண்டுகளுக்கு பிறகு அக்.26 முதல் மீண்டும் இந்தியா – சீனா இடையே விமான சேவை – முழு விவரம்
    • Patriot: மம்மூட்டி – மோகன்லால் இணையும் புதிய படம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.