Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, October 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
    உலகம்

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு

    adminBy adminOctober 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும். வரிச் சலுகை, உணவு மற்றும் மின்சாரத்திற்கான மானியங்கள் வழங்க வேண்டும் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை முன்வைத்து ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைமையில் கடந்த 3 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூன்றாவது நாளாக நீடித்த வன்முறையில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது 12 பேர் கொல்லப்பட்டனர். டாடியாலில் தொடங்கி முசாபராபாத், ராவலகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி வரை இந்த போராட்டங்கள் பரவியுள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், முசாபராபாத்தில் ஐந்து போராட்டக்காரர்களும், தீர்கோட்டில் ஐந்து பேரும், தத்யாலில் இரண்டு போராட்டக்காரர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று காவல்துறையினரும் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    செப்டம்பர் 29 அன்று போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மொபைல், இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவைகளும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. முசாபராபாத்தில் பேரணியைத் தடுக்க பாலங்களில் வைக்கப்பட்டிருந்த கற்களை வீசி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பெரிய கப்பல் கொள்கலன்களை கவிழ்க்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.

    நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கவும், அமைதியான தீர்வைக் காணவும் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.

    இதற்கிடையில், ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசியக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நசீர் அஜீஸ் கான், இந்த விவகாரத்தில் அவசர தலையீட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘காந்தி சிலை மீட்டெடுக்கப்பட்டது’: லண்டன் நினைவுச்சின்னம் காழ்ப்புணர்ச்சிக்குப் பிறகு சரிசெய்யப்பட்டது; யுகே தூதர் இதை ‘இந்தியா -இங்கிலாந்து நட்பின் துணி’ என்று பாராட்டுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    October 2, 2025
    உலகம்

    நிவாரண பொருட்களுடன் காசாவை நெருங்கிய கிரெட்டா தன்பெர்க் படகை இடைமறித்த இஸ்ரேல் – நடந்தது என்ன?

    October 2, 2025
    உலகம்

    தலைதூக்கும் சோயாபீன்ஸ் விவகாரம்: விரைவில் சீன அதிபரை சந்தித்து பேசும் ட்ரம்ப்

    October 2, 2025
    உலகம்

    “எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது நாட்டுக்கே அவமானம்” – ட்ரம்ப் வேதனை

    October 2, 2025
    உலகம்

    ‘வேண்டுமென்றே பட்டினி கிடந்தது’ மரணத்திற்கு: இந்திய மூல தம்பதியினர் இங்கிலாந்தில் 3 வயது மகளை கொன்றதாகக் கூறப்படுகிறது; நீதிமன்றம் சிலிர்க்கும் விவரங்களைக் கேட்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    October 1, 2025
    உலகம்

    அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்: பணி இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் – பின்னணி என்ன?

    October 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அஞ்சுகிறதா?” – திருமாவளவன்
    • ஊறவைத்த பாதாம் மற்றும் ஊறவைத்த அக்ரூட் பருப்புகள்: எந்த நட்டு ஆரோக்கியமானது, ஏன்
    • பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு
    • காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்தது!- பவுன் ரூ.88,000-ஐ நெருங்கியது
    • இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக நடைபயிற்சி தவிர வேறு 7 சிறந்த பயிற்சிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.