Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, October 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ம.பி.யில் குர்ஆன் கற்ற 556 இந்து குழந்தைகள்: மதமாற்ற முயற்சியா? – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்
    தேசியம்

    ம.பி.யில் குர்ஆன் கற்ற 556 இந்து குழந்தைகள்: மதமாற்ற முயற்சியா? – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

    adminBy adminOctober 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ம.பி.யில் குர்ஆன் கற்ற 556 இந்து குழந்தைகள்: மதமாற்ற முயற்சியா? – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் 27 மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்பட்டுள்ளது. ‘இது, மதமாற்ற முயற்சியா?’ எனக் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் ம.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    556 இந்து குழந்தைகளுக்கு குர்ஆன் கற்பிக்கப்படுவதும், மத்தியப் பிரதேசத்தில் 27 மதரஸாக்கள் மதமாற்றத்திற்குத் தயாராகி வருவதும் ஏன்? என மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபால், ஹோஷங்காபாத், ஜபல்பூர், ஜபுவா, தார், பர்வானி, காண்ட்வா, கார்கோன் மற்றும் பராசியா மாவட்டங்களில் அரசு அனுமதி பெறாத பல மதரஸாக்கள் செயல்படுகின்றன.

    இவற்றில், இந்து குழந்தைகளும் இணைந்து கல்வி பயில்கின்றனர். அந்த 556 இந்து குழந்தைகளுக்கு அந்த மதரஸாக்களில் புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்படுவது தெரிந்துள்ளது.

    இந்த முயற்சி, அந்த இந்து குழந்தைகளை இஸ்லாத்திற்கு மாற்ற மதரஸாக்கள் அழுத்தம் கொடுத்ததாகப் புகார் கிளம்பியுள்ளது. இது குறித்த தகவல் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகாராக அனுப்பப்பட்டுள்ளது.

    இதை விசாரணைக்கு எடுத்த ஆணையம், பாஜக ஆளும் ம.பி அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், மதரஸாக்களில் இந்து குழந்தைகளை இஸ்லாத்திற்கு மாற்றும் நடவடிக்கை நடைபெறுகிறதா? எனக் கேள்வியும் எழுப்பப்பட்டு உள்ளது.

    தேசிய மனித உரிமை ஆணையத்தின் இந்த நோட்டீஸ் ம.பி.யின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மீது விசாரணை நடத்தி ஆணையத்திற்கு அறிக்கை அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான பிரியங்க் கனூங்கோ கூறுகையில், ‘கடந்த செப்டம்பர் 26-ம் தேதி அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்ற கும்பல் செயல்படுவதாகக் கூறி ஆணையத்திற்கு புகார் வந்தது.

    முஸ்லிம் அல்லாத குழந்தைகளை மதரஸாக்களில் எப்படி சேர்க்க முடியும்? இதுபோன்ற பெரும்பாலான மதரஸாக்கள் அரசாங்க அனுமதியின்றி இயங்குவதாகவும் புகார்கள் வந்துள்ளன.

    சிறார் நீதிச் சட்டம் 2015 மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 28(3) ஆகியவை அனுமதியின்றி மதக் கல்வியைத் தடைசெய்துள்ளது. இந்த மதரஸாக்களில் உள்ள இந்து குழந்தைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

    அனுமதியின்றி செயல்படும் மதரஸாக்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யவும் ஆணையம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பதிலை அரசு 15 நாட்களில் ஆணையத்திடம் அனுப்பும்படி கோரியுள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்!

    October 2, 2025
    தேசியம்

    “விடுதலைக்காக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சிறை சென்றனர்” – நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

    October 1, 2025
    தேசியம்

    மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு: மோடி, ட்ரம்ப் சந்தித்து பேச வாய்ப்பு

    October 1, 2025
    தேசியம்

    காங்கிரஸ் தலைவர் கார்கே மருத்துவமனையில் அனுமதி

    October 1, 2025
    தேசியம்

    உ.பி.யில் முஸ்லிம் மதத் தலைவருக்கு தொடர்புடைய 8 ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க முடிவு

    October 1, 2025
    தேசியம்

    அயோத்தியில் உள்ள அனுமன்கிரி கோயில் பிரசாதத்தில் கலப்படம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

    October 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்!
    • திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: அன்புமணி
    • சிவப்பு நிறத்தில் ராணி, ம au வ்ஸில் கஜோல்: துர்கா பூஜையில் முகர்ஜி சகோதரிகளின் சேலை கிளாம் நிகழ்ச்சியைத் திருடுகிறார்
    • ₹ 100 க்கு கீழ் ஒரு ரசாயன -இலவச ஆலம் அல்லது ஃபிட்கரி டியோடரண்ட் செய்வது எப்படி – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘பாக். அணியுடன் கைகுலுக்கல் இல்லை’ – இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை பின்தொடரும் மகளிர் அணி | Women’s WC

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.