Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, October 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
    மாநிலம்

    ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

    adminBy adminOctober 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஆ​யுத​பூஜையை முன்​னிட்டு சென்​னை​யில் நேற்று பூஜைப் பொருட்​களை வாங்​கு​வதற்​காக திரண்ட பொது​மக்​களால் கடைவீ​தி​கள் மற்​றும் முக்​கிய சந்​தைகள் களை​கட்​டின. நாடு முழு​வதும் இன்று ஆயுத​பூஜை கோலாகல​மாக கொண்டாடப்படுகிறது. இதையொட்​டி, சென்னை கோ​யம்​பேடு, பாரி​முனை, தியாக​ராய நகர், பெரம்​பூர், புரசை​வாக்​கம், வண்ணாரப்​பேட்டை உள்​ளிட்ட முக்​கிய சந்​தைகள் காலை முதலே பரபரப்​பாக காணப்​பட்​டது.

    குறிப்​பாக, ஆயுத பூஜையை முன்​னிட்டு கோயம்​பேட்​டில் அக்​.5-ம் தேதி வரை சிறப்பு சந்தை நடை​பெறுகிறது. இதில் பொறி, கடலை, வாழைப்​பழம், இலை, தேங்​காய், பழங்​கள் உள்​ளிட்ட பூஜை பொருட்​களை விற்​பனை செய்ய தனி​யாக ஓர் இடம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இங்​கும் அமோக​மாக விற்​பனை நடை​பெற்​றது.

    அதே​நேரம், பொருட்​கள் மற்​றும் பூக்​களின் விலை வழக்​கத்தைவிட அதி​கரித்​திருந்​தது. அதன்​படி, ஒரு கிலோ மல்லி ரூ.600-ல் இருந்து 800-ஆக​வும், முல்லை 500-ல் இருந்து ரூ.700-ஆக​வும், கனகாம்​பரம் 400-ல் இருந்து 800-ஆக​வும், அரளி பூ ரூ.200-ல் இருந்து 350-ஆக​வும், சாமந்தி ரூ.100-ல் இருந்து 180-ஆக​வும், சம்​மங்கி ரூ.100-ல் இருந்து 200-ஆக​வும் உயர்ந்து விற்​பனை​யானது.

    சில்​லறை வியா​பாரி​களும் கடைகளுக்கு தேவை​யான பொருட்​களை வாங்​கிச் சென்​றனர். இதேபோல், வாட்​டர் வாஷ் செய்வதற்கும் மெக்​கானிக் ஷாப்​களில் ஏராள​மான வாக​னங்​கள் குவிந்த வண்​ணம் இருந்​தன. சுண்​டல் உள்​ளிட்ட பதார்த்​தங்களைச் செய்​வதற்​கான பொருட்​களை வாங்க மளிகை கடைகளி​லும் கூட்​டம் குவிந்​தது.

    குறிப்​பாக, மாலை நேரங்​களில் இறுதி நேர வியா​பாரம் களை​கட்​டியது. இவ்​வாறு பொருட்​களை வாங்​கிச் செல்ல ஏராள​மான வியா​பாரி​கள் மற்​றும் பொது​மக்​கள் வந்த நிலை​யில், அலு​வல​கம் முடிந்து வீடு செல்​வோர், பண்​டிகைக்​காக ஊர்​களுக்​குச் செல்​வோர் என அணிவகுத்​த​தால் முக்​கிய சாலைகளி​லும், புறநகர் பிர​தான சாலைகளி​லும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. போக்​கு​வரத்து காவலர்​கள் கூடு​தலாக பணி​யமர்த்​தப்​பட்​டு, நெரிசலை சீர் செய்​தனர்.

    சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கிளாம்​பாக்​கம், கோ​யம்​பேடு, மாதவரம் உள்​ளிட்ட பேருந்து நிலை​யங்​களுக்கு வந்​தவர்​களுக்​காக சிறப்பு பேருந்​துகள் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தன. வாரத்​தின் இடை​யில் ஆயுத​பூஜை வந்​த​போதும், அதைத் தொடர்ந்து காந்தி ஜெயந்தி என தொடர் விடு​முறை இருப்​ப​தால் பலரும் ஊர்​களுக்கு பயணிக்க திட்​ட​மிட்​ட​தால் காலை முதலே மக்​கள் கூட்டம் அலைமோ​தி​யது. முன்​ப​திவு செய்​தவர்​கள் சம்​பந்​தப்​பட்ட பேருந்​தி​லும், அண்டை மாவட்​டங்​களில் வசிப்​போர் மற்​றும் முன்​ப​திவு செய்​யாமல் வந்​தவர்​கள் பேருந்​துக்​காக காத்​திருந்து பயணித்​தனர்.

    முன்​ன​தாக, கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் ஆய்வு செய்த போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர், பேருந்​துகளை பாது​காப்​பாக இயக்​கு​மாறு ஓட்​டுநர், நடத்​துநர்​களுக்கு அறி​வுறுத்​தல் வழங்​கியதோடு, சிறப்பு பேருந்து இயக்​கம் குறித்து பயணி​களிட​மும் கேட்​டறிந்​தார். மெட்​ரோ ரயில்​களி​லும் நேற்று கூட்​டம் அதி​கரித்து காணப்​பட்​டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அருணா ஜெகதீசன் விசாரணையை காங்கிரஸ் எதிர்க்கவில்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்

    October 1, 2025
    மாநிலம்

    விஜய்யை கைது செய்யக் கோரி ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்த கல்லூரி மாணவிகள்!

    October 1, 2025
    மாநிலம்

    விஜய்யின் பிரச்சாரம் அடுத்த 2 வாரங்களுக்கு ரத்து: தவெக அறிவிப்பு

    October 1, 2025
    மாநிலம்

    செருப்பு வீச்சு முதல் கரூர் வழக்கு வரை: முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 12 கேள்விகள்

    October 1, 2025
    மாநிலம்

    கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? – விஜய்க்கு செந்தில் பாலாஜி பதில்; நிமிட வாரியாக விவரிப்பு

    October 1, 2025
    மாநிலம்

    ஒகேனக்கல் 3-ம் கட்ட குடிநீர் திட்டம்: ரூ.8,428.50 கோடியில் செயல்படுத்த அரசாணை வெளியீடு

    October 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நல்ல கொழுப்பு விளக்கினார்: எச்.டி.எல் இயற்கையாகவே வளர்க்கும் மற்றும் உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் தேசி உணவுகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்: தசரா திருவிழாவில் நாளை மகிஷாசூர சம்ஹாரம்!
    • அருணா ஜெகதீசன் விசாரணையை காங்கிரஸ் எதிர்க்கவில்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்
    • பாதுகாப்பான மிதக்கும் உதவிக்குறிப்புகள்: மிதப்பது பற்களுக்கு பாதுகாப்பானதா? பாதுகாப்பான மிதப்புக்கான பல் மருத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்ட உதவிக்குறிப்புகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விஜய்யை கைது செய்யக் கோரி ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்த கல்லூரி மாணவிகள்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.