Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, October 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விஜய்யின் வீடியோ உரை ‘அரசியல் உள்நோக்கம்’ கொண்டது: பெ.சண்முகம்
    மாநிலம்

    விஜய்யின் வீடியோ உரை ‘அரசியல் உள்நோக்கம்’ கொண்டது: பெ.சண்முகம்

    adminBy adminSeptember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விஜய்யின் வீடியோ உரை ‘அரசியல் உள்நோக்கம்’ கொண்டது: பெ.சண்முகம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ உரை என்பது முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் 27-ம் தேதி கரூரில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இதுவரை 41 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோயுள்ளன. பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்ற நொடியில் இருந்தே தன்னார்வத்துடன் பொதுமக்களும், மருத்துவத் துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு மக்களின் மதிப்புமிக்க உயிர்களைப் பாதுகாத்துள்ளது.

    தமிழக முதல்வர் உள்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் 27-ம் தேதி இரவு முதலே நேரில் கரூர் சென்று இப்பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத் தொகையும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரில் கரூர் சென்று தங்களது ஒருமைப்பாட்டையும், ஆறுதலையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

    ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது. காவல் துறை மட்டத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இதன் மூலம் மேலும் விவரங்கள் தெரிய வர வாய்ப்புள்ளது.

    இந்நிலையில், இந்தக் கொடும் சம்பவம் நடைபெற்று மூன்று தினங்களுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது கட்சி நடத்திய நிகழ்வில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகளுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மாநில அரசும், அரசியல் கட்சிகளும், மக்களும் செய்திட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதே சரியானதாக இருக்க முடியும்.

    தான் மிக மிக தாமதமாக வந்தது குறித்தோ, பரப்புரையின் போது நெரிசலில் மக்கள் சிக்கிக் கொண்டிருந்த நேரத்தில் தனது தொண்டர்களை கட்டுப்படுத்த முயற்சிக்காதது, அவர் உடனடியாக கரூரை விட்டு வெளியேறியதற்கான உரிய காரணங்களைப் பற்றியோ காணொளியில் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை.

    இதற்கு மாறாக அவரது உரை என்பது முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. உயிர் இழப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக, அரசு நிர்வாகத்தின் மீது பழி சுமத்துவதாகவே இருக்கிறது. 41 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கூட தன்னையும், தன் கட்சி தொண்டர்களையும் பழிவாங்குவதற்கான மாநில அரசின் சதி என்கிறார். தனது கட்சி தொண்டர்களை தூண்டி விடும் விதமாகவே அவரது உரை அமைந்துள்ளது.

    இதுபோன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற கருத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மதிப்புமிக்க மனித உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் தலைமைப் பண்பையும், மனித மாண்பையும் வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் விஜய் வெளியிட்டுள்ள காணொளி எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இத்தகைய உள்நோக்கங்கள் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘சி.எம். சார்’ என் மீது கை வையுங்கள்; தொண்டர்களை விட்டுவிடுங்கள் – வீடியோ வெளியிட்டு விஜய் ஆவேசம்

    October 1, 2025
    மாநிலம்

    கைதான தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

    October 1, 2025
    மாநிலம்

    விஜய் கட்சியை ‘வளைக்கும்’ அரசியல் சதிவலையை பாஜக விரிக்கிறது: இந்திய கம்யூ.

    October 1, 2025
    மாநிலம்

    தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு – சர்ச்சை கருத்தால் நடவடிக்கை

    October 1, 2025
    மாநிலம்

    எண்ணூர் கட்டிட விபத்து: பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

    September 30, 2025
    மாநிலம்

    எண்ணூர் விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

    September 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘சி.எம். சார்’ என் மீது கை வையுங்கள்; தொண்டர்களை விட்டுவிடுங்கள் – வீடியோ வெளியிட்டு விஜய் ஆவேசம்
    • ஆப்டிகல் மாயை: காளான்களுக்கு இடையில் மறைக்கப்பட்ட சுட்டியைக் கண்டுபிடிக்க முடியுமா? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கைதான தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
    • சுய செயல்திறன்: உங்களை நம்புவது உங்களுக்கு வளர உதவும், மேலும் நரம்பியல் இதை ஆதரிக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விஜய் கட்சியை ‘வளைக்கும்’ அரசியல் சதிவலையை பாஜக விரிக்கிறது: இந்திய கம்யூ.

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.