Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘கோயில்முன் இந்து அல்லாதோர் பிரசாதம் விற்றால் தாக்கலாம்’ – பிரக்யா தாக்கூர் பேச்சால் சர்ச்சை!
    தேசியம்

    ‘கோயில்முன் இந்து அல்லாதோர் பிரசாதம் விற்றால் தாக்கலாம்’ – பிரக்யா தாக்கூர் பேச்சால் சர்ச்சை!

    adminBy adminSeptember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘கோயில்முன் இந்து அல்லாதோர் பிரசாதம் விற்றால் தாக்கலாம்’ – பிரக்யா தாக்கூர் பேச்சால் சர்ச்சை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: “கோயில்கள் முன்பாக இந்து அல்லாதோர் பிரசாதப் பொருட்கள் விற்றால் அவர்களை உதைக்கலாம்” என முன்னாள் பாஜக எம்.பி.யும், பெண் துறவியுமான பிரக்யா தாக்கூர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    ம.பி.யின் தலைநகரான போபாலின் முன்னாள் பாஜக எம்.பி.யாக இருந்தவர் துறவி பிரக்யா சிங் தாக்கூர். இவர், நேற்று முன்தினம் போபாலின் ஒரு நவராத்ரி விழாவில் கலந்துகொண்டு பேசினார். இது, பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்டது. இதில் முக்கிய விருந்தினரான பெண் துறவி பிரக்யா, முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

    இந்து அல்லாதவர்கள் கோயில்களின் முன்பாக பிரசாதங்களை விற்றால் அவர்களை தாக்கலாம் என்றும், மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார். போபாலின் சோலா பகுதியில் நடந்த துர்கா வாஹினி பகுதி நவராத்ரி பெண்கள் விழாவில் முன்னாள் எம்பி பிரக்யா தாக்கூர் பேசியதாவது: பிற எந்த மதத்தைச் சேர்ந்தவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்.

    அவர்கள் விளக்குகள், பிளம்பிங் சாதனங்கள் அல்லது துப்புரவுப் பணியாளர்கள் என எந்த பணிக்காக வந்தாலும் சரி. பிறமதத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாடம் கற்பிக்க வீட்டிலேயே ஆயுதங்களை வைத்திருங்கள்.நவராத்திரியின் போது, நாம் வாழும் பகுதியின் கோயில்களைச் சுற்றி யார் பிரசாதம் விற்கிறார்கள் என்பதைக் கண்டறிய கோயில்களில் பல குழுக்களை உருவாக்க வேண்டும். இந்துக்கள் அல்லாதவர்கள் பிரசாதம் விற்பனை செய்வதைக் கண்டால், முடிந்தவரை அவர்களை அடித்து நொறுக்குங்கள்.

    இந்துக்கள் அல்லாதவர்களிடமிருந்து பிரசாதம் வாங்க மாட்டோம். அதை விற்க விடமாட்டோம், கோவிலுக்குள் நுழையவும் அனுமதிக்க மாட்டோம் என உறுதி கொள்ளுங்கள். எனத் தெரிவித்தார்.தேசத்தந்தை மகாத்மா காந்தி மற்றும் நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல் துறவி பிரக்யா பேசுகையில், ‘கொடி இல்லாமல், கேடயம் இல்லாமல் சுதந்திரம் அடையப்பட்டது என இவர்கள் கூறினர்.

    அவர்கள் அதிகாரத்திற்கு மட்டுமே பேராசை கொண்டவர்கள். தேர்தலில் வாக்குகளைப் பெறாமல் நாட்டின் இதயங்களை வெல்லாதவர் முதல் பிரதமரானார். அவர் எந்த வகையிலும் நாட்டிற்கு சேவை செய்யவில்லை.அவர் ஆங்கிலேயர்களைப் புகழ்ந்து பேசுவார். அவர் ஆங்கிலேயர்களுக்கு முன்பாக வணங்குவார். குணத்திலும், நடத்தையிலும் நல்லவர் அல்ல.தலைமைத்துவம் அவருக்கு இல்லை. அத்தகையவர்களை பிரதமராக்கி நம் நாட்டின் முதுகில் குத்தினார்.’ எனக் கூறினார்.

    இதுபோல், சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் பிரபலமானவர் பிரக்யா தாக்கூர். இவர், கடந்த 2008-ல் மகராஷ்டிராவின் மாலேகான் வெடிகுண்டு வழக்கிலும் சிக்கி சிறைப்பட்டிருந்தார். பல வருடங்கள் நடைபெற்ற இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த ஜுலை 31-ல் வெளியானது. இதில், துறவி பிரக்யா உள்ளிட்ட அனைவரும் ஆதாரங்கள் இல்லை என வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது நினவுகூரத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அக்.1-ல் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: தலைமை விருந்தினராக பங்கேற்கிறார் பிரதமர் மோடி

    September 30, 2025
    தேசியம்

    இந்தியா-பூடான் இடையே ரயில் இணைப்பு திட்டம்: வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு

    September 30, 2025
    தேசியம்

    வழக்கறிஞர்கள், சாட்சிகள் ஆஜராகாததால் நீதிமன்றங்களில் 5.3 கோடி வழக்குகள் தேக்கம்

    September 30, 2025
    தேசியம்

    காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் ட்ரம்ப்பின் திட்டம்: மோடி வரவேற்பு

    September 30, 2025
    தேசியம்

    வாட்ஸ்-அப் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து: கணவன், குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு

    September 30, 2025
    தேசியம்

    வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

    September 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது
    • வைட்டமின் டி சாச்செட்ஸ் Vs மாத்திரைகள் Vs ஷாட்கள்: இது சிறந்தது, யார் என்ன எடுக்க வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கரூர் சம்பவம்: புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு
    • இந்த எளிய இரத்த பரிசோதனை அறிகுறிகளைக் காண்பிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் சேதத்தைக் கண்டறிய முடியும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தேஜகூ எம்பிக்கள் குழுவுடன் விஜய் இணைந்து செயல்பட வேண்டும்: தமிழக பாஜக

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.