Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விஜய் கரூர் செல்ல உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: நீதிமன்றத்தில் தவெக கோரிக்கை
    மாநிலம்

    விஜய் கரூர் செல்ல உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: நீதிமன்றத்தில் தவெக கோரிக்கை

    adminBy adminSeptember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விஜய் கரூர் செல்ல உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: நீதிமன்றத்தில் தவெக கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கோரிக்கை வைத்துள்ளதாக தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் தெரிவித்தார்.

    மதுரையில் தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளில் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளது என எங்கள் மனுவில் கூறியுள்ளோம். எனவே காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது எனவும், சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.

    இதில் இரண்டு நிவாரணங்கள் கேட்டுள்ளோம். கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை நீக்கிவிடுவார்கள், எனவே அதனை பாதுகாக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.

    இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி சொல்லியிருந்தார்கள். ஆனால், பதிவாளர் இது தொடர்பாக இன்னும் உத்தரவு எதுவும் வரவில்லை எனச் சொல்லியுள்ளார். ஒருவேளை இன்று விசாரிக்கவில்லை என்றால், நாளையோ அல்லது வெள்ளிக்கிழமையோ விசாரணைக்கு வரும் என்று நம்புகிறோம்.

    கரூர் நிகழ்ச்சியில் தடியடி நடத்தப்பட்டது என எங்கள் மனுவில் குறிப்பிட்டிருக்கிறோம். உயிரிழந்தவர்களை உடனடியாக உடற்கூராய்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன?. ஏற்கெனவே மருத்துவமனையில் உயிரிழந்தவர்களையும் இந்த கணக்கில் காட்டியுள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளது.

    இச்சம்பவத்தில் மிகப்பெரிய சதிவலை உள்ளது, இது தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. செந்தில் பாலாஜி பற்றி விமர்சித்த பின்னர் விஜய் மீது அந்தக் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. இதுகுறித்து எல்லாம் விசாரிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களில் எல்லாம் விஜய் பிரச்சாரம் செய்தபோது பிரச்சினை இல்லை, கரூரில் மட்டும் பிரச்சினை ஏற்பட்டது ஏன்?. இதில் அனைவரும் ஒருவரையே குற்றம் சாட்டுகின்றனர்.

    நாங்கள் காவல்துறை கொடுத்த நிபந்தனைகள் எதையும் மீறவில்லை. மக்களுக்கு குடிநீர், உணவு ஆகியவற்றை தவெக நிர்வாகிகள் கொடுத்தார்கள். தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தண்ணீரில் எரியும் அடுப்பு நடைமுறையில் சாத்தியமா? – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம்

    September 30, 2025
    மாநிலம்

    ராமதாஸுடன் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு

    September 30, 2025
    மாநிலம்

    பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: மின்வாரியம் அறிவுறுத்தல்

    September 30, 2025
    மாநிலம்

    சர்வர் பிரச்சினையால் முடங்கிய சார்பதிவாளர் அலுவலகங்கள்: பலமணி நேரம் காத்திருந்த பொதுமக்கள்

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவத்தில் அரசியல் சதி? – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழக பாஜக வலியுறுத்தல்

    September 30, 2025
    மாநிலம்

    “அரசியல் பலத்தை காட்டவே விஜய் தாமதமாக வந்தார்” – போலீஸ் எஃப்ஐஆரில் தகவல்!

    September 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தண்ணீரில் எரியும் அடுப்பு நடைமுறையில் சாத்தியமா? – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம்
    • ஏற்கனவே தொலைபேசியை கீழே வைத்தார், ஆனால் இன்னும் தூங்க முடியவில்லையா? அது ஏன் நடக்கிறது, இந்த சிக்கலை எவ்வாறு சரிசெய்வது என்பதை அறிந்து கொள்ளுங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராமதாஸுடன் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு
    • இந்த தேநீர் எடை இழப்பு மற்றும் தொடர்புடைய வளர்சிதை மாற்ற நோய்களுக்கு உதவக்கூடும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • முதுகலை ஆசிரியர் தேர்வு திட்டமிட்டபடி அக். 12-ல் நடைபெறும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.