Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரூர் நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற செய்திகளை தவிர்க்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
    மாநிலம்

    கரூர் நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற செய்திகளை தவிர்க்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

    adminBy adminSeptember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரூர் நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற செய்திகளை தவிர்க்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வேதனைக்குரிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ளனர். நெரிசல் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதல்வர் ஸ்டா லின் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கரூரில் நடந்தது பெருந்துயரம், கொடுந்துயரம். இதுவரை நடக்காத துயரம், இனி, நடக்கக்கூடாத துயரம். மருத்துவமனையில் நான் பார்த்த காட்சிகள் இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலும், துயரத்திலும்தான் இன்னும் இருக்கிறேன்.

    செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பிறகும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனடியாக அன்று இரவே கரூருக்கு போனேன். குழந்தைகள், பெண்கள் என்று 41 உயிர்களை இழந்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து, அதை உடனடியாக வழங்கி வருகிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நடந்த சம்பவத்துக்கான முழுமையான உண்மையான காரணத்தை ஆராய, முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று உறுதியளிக் கிறேன்.

    இதற்கிடையே, சமூக ஊடகங்களில் சிலர் பரப்பும் வதந்திகள், பொய் செய்திகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொருத்தவரை அவர்கள் நம் தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில், பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்போது, எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை.

    எனவே, விசாரணை ஆணைய அறிக்கை கிடைத்த பிறகு, அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளோடு ஆலோசனை நடத்தி, இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும். அத்தகைய நெறிமுறைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன். மனித உயிர்களே எல்லாவற்றுக்கும் மேலானது. மானுடப் பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனிதப் பகைகள் என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டு, எல்லோரும் மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டும். தமிழகம் எப்போதுமே பல வகைகளிலும் நாட்டுக்கு முன்னோடியாகதான் இருந்து வருகிறது. எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை.இவ்வாறு முதல்வர் தெரிவித்து உள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விஜய் கரூர் செல்ல உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: நீதிமன்றத்தில் தவெக கோரிக்கை

    September 30, 2025
    மாநிலம்

    அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீத கல்விக் கட்டண விலக்கு: புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல்

    September 30, 2025
    மாநிலம்

    விஜய் 4 மணி நேரம் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம்: முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டு

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் துயரச் சம்பவம் குறித்து விஜய்யிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் ராகுல் காந்தி

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் நெரிசலுக்கான காரணங்களை ஆராய்வதற்காக ஹேமமாலினி தலைமையில் 8 எம்.பி.க்கள் குழு: பாஜக உத்தரவு

    September 30, 2025
    மாநிலம்

    திருப்பதி பிரம்மோற்சவம்: 28 டன் எடை, 32 அடி உயரம் கொண்ட தங்க ரதம்

    September 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விஜய் கரூர் செல்ல உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: நீதிமன்றத்தில் தவெக கோரிக்கை
    • புரதக் குறைபாடு: 8 அறிகுறிகள் உங்கள் உடலுக்கு அதிக புரதம் தேவைப்படுகிறது, மேலும் இந்த ஊட்டச்சத்தைப் பெற சரியான வழி
    • அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீத கல்விக் கட்டண விலக்கு: புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல்
    • ஏ.சி.யுடன் தூங்க விரும்புகிறீர்களா? இந்த 6 சுகாதார ஆபத்துகள் உங்கள் மனதை மாற்றக்கூடும்
    • விஜய் 4 மணி நேரம் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம்: முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.