Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மக்கள் கேள்வி கேட்டால்தான் நலத்திட்டங்கள் கிடைக்கும் – அன்புமணி
    மாநிலம்

    மக்கள் கேள்வி கேட்டால்தான் நலத்திட்டங்கள் கிடைக்கும் – அன்புமணி

    adminBy adminSeptember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மக்கள் கேள்வி கேட்டால்தான் நலத்திட்டங்கள் கிடைக்கும் – அன்புமணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 29 Sep, 2025 03:26 PM

    Published : 29 Sep 2025 03:26 PM
    Last Updated : 29 Sep 2025 03:26 PM

    மக்கள் கேள்வி கேட்டால்தான் நலத்திட்டங்கள் கிடைக்கும் – அன்புமணி

    விருதுநகர்: மக்கள் கேள்வி கேட்டால் தான் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

    ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாள் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று (செப்.29) விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள குண்டாறு பகுதியை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசுகையில், “இந்த நடை பயணத்தில் மக்களை சந்தித்து அவர்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பதை அறிந்து அவர்களோடு இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தான் இதன் முக்கிய நோக்கம். திமுக ஆட்சி வருவதற்கு முன்பு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி நாட்களை 150 நாட்களாக உயர்த்தி வழங்குவோம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது 10 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்கள். ஆனால் யாருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இப்பகுதியில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் 50 முதல் 500 டிஎம்சி வரை தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. அதில் 7 டிஎம்சி தண்ணீரை தான் நாம் கேட்கிறோம். கரூரிலிருந்து 264 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வந்தால் இப்பகுதியில் விவசாயம் செழிக்கும். கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டத்திற்கு ரூ.360 கோடி ஒதுக்கப்பட்டது ஆனால் மொத்தம் உள்ள 264 கிலோ மீட்டர் தூரத்திற்கு இதுவரை 8 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பணிகள் நடந்துள்ளன. குண்டாறு இணைப்பு திட்டம் என்ன ஆனது என்று உங்கள் பகுதி நிதி அமைச்சரிடம் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் தான் பல தலைமுறை செழிக்கும்.

    நீங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் அன்று மாலையிலேயே டாஸ்மாக் கடைக்கு போய் விடுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவுக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சருக்கு ரூ.364 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணி முடிப்பது சிரமமாக உள்ளதா என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

    ஆறுகளில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். அப்போதுதான் நீர் ஆதாரம் உயரும். ஆனால் மணல் கொள்ளைக்காக தடுப்பணைகள் கட்டப்படுவதில்லை.” என்று பேசினார். இந்நிகழ்ச்சியின் போது மாநில பொருளாளர் திலகபாமா, மாவட்டச் செயலாளர் செந்தில் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News

    தவறவிடாதீர்!




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் துயரச் சம்பவம் குறித்து விஜய்யிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் ராகுல் காந்தி

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் நெரிசலுக்கான காரணங்களை ஆராய்வதற்காக ஹேமமாலினி தலைமையில் 8 எம்.பி.க்கள் குழு: பாஜக உத்தரவு

    September 30, 2025
    மாநிலம்

    திருப்பதி பிரம்மோற்சவம்: 28 டன் எடை, 32 அடி உயரம் கொண்ட தங்க ரதம்

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற செய்திகளை தவிர்க்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

    September 30, 2025
    மாநிலம்

    தங்​கம் விலை வரலாறு காணாத புதிய உச்​சம்: பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.86,160-க்கு விற்​பனை

    September 30, 2025
    மாநிலம்

    ஐஏஎஸ் அதி​காரி​கள் 3 பேர் இடமாற்றம்

    September 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் துயரச் சம்பவம் குறித்து விஜய்யிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் ராகுல் காந்தி
    • கரூர் நெரிசலுக்கான காரணங்களை ஆராய்வதற்காக ஹேமமாலினி தலைமையில் 8 எம்.பி.க்கள் குழு: பாஜக உத்தரவு
    • வீட்டில் கொதிக்கும் நீர் மற்றும் உப்புடன் ஒரு அடைபட்ட மடுவை எளிதாக | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஜெய் ஹனுமான்’ படத்தை ஒப்புக்கொண்டது எப்படி? – ரிஷப் ஷெட்டி பகிர்வு
    • திருப்பதி பிரம்மோற்சவம்: 28 டன் எடை, 32 அடி உயரம் கொண்ட தங்க ரதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.