Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»ஆசியக் கோப்பையை ‘எடுத்துச் சென்ற’ மோசின் நக்வி – போட்டி முடிந்ததும் அரங்கேறிய பரபரப்பு நாடகம்!
    விளையாட்டு

    ஆசியக் கோப்பையை ‘எடுத்துச் சென்ற’ மோசின் நக்வி – போட்டி முடிந்ததும் அரங்கேறிய பரபரப்பு நாடகம்!

    adminBy adminSeptember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆசியக் கோப்பையை ‘எடுத்துச் சென்ற’ மோசின் நக்வி – போட்டி முடிந்ததும் அரங்கேறிய பரபரப்பு நாடகம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையை சாம்பியனான இந்திய அணி வாங்க மறுத்தது, இதனையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி ஒரு மணி நேரம் கால தாமதமானது.

    இந்திய அணிக்குச் சேர வேண்டிய கோப்பையையும் பதக்கங்களையும் மோசின் நக்வி எடுத்துச் சென்றது கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. மோசின் நக்வி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் என்பதோடு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் கூட.

    இதனையடுத்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மாட்டோம் என்று முடிவெடுத்தோம். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். அதனால் நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்தோம், இதனால் அந்தக் கோப்பையை அவர் எடுத்துக் கொள்ளட்டும் என்று அர்த்தமல்ல. அதனால் கோப்பையும் பதக்கங்களையும் அவர் எடுத்துச் செல்ல முடியாது. விரைவில் அது இந்திய அணியிடம் சேர்ப்பிக்கப்படும் என்று நம்புகிறோம்.

    வரும் நவம்பர் மாதம் துபாயில் ஐசிசி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் நாங்கள் பாகிஸ்தானின் மோசின் நக்விக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யப்போகிறோம்.” என்றார்.

    ஆட்டம் முடியும் போது துபாய் நேரம் இரவு 10:30. பரிசளிப்பு நிகழ்ச்சிக்காகக் காத்திருந்தவர்களுக்கு குழப்பம் அதிகரித்தது. தாமதத்திற்குக் காரணம் என்ன என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க இந்திய அணி விரும்பவில்லை என்று அரசல் புரசலாகத் தகவல்கள் கசிந்தன.

    பரிசளிப்பு நிகழ்ச்சித் தொடங்கிய பிறகு குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா, திலக் வர்மா மேடையில் இருந்த மற்ற விஐபிக்களிடமிருந்து பதக்கங்களைப் பெற்றனர். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, நக்வியிடமிருந்து ரன்னர்களுக்குரிய காசோலையைப் பெற்றார்.

    அப்போது இந்திய அணிக்குக் கோப்பை என்னவாயிற்று என்ற கேள்வி எழுந்தது. உடனே பரிசளிப்பு நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சி ஊடகத்தின் சைமன் டூல் , ‘இந்திய அணி தங்கள் பதக்கங்களையும் விருதுகளையும் இன்று இரவு பெறப்போவதில்லை’ என்று அறிவித்ததோடு, பரிசளிப்பு நிகழ்ச்சி முடிந்தது என்றார்.

    ஆட்டம் முடிந்த பிறகு சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில், “நான் கிரிக்கெட் ஆடும் காலத்திலிருந்து இப்படி ஒன்று நடத்தையைப் பார்த்ததில்லை. சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கோப்பையைக் கொடுக்காமல் மறுப்பது இதுதான் முதல் முறை. நாங்கள்தான் கோப்பையை பெற முழுத் தகுதி பெற்றவர்கள். இதை விட வேறு எதையும் என்னால் கூற முடியவில்லை.

    டிராபி கொடுக்காவிட்டால் என்ன என் டிராபிக்கள் என்னுடன் ஓய்வறையில் இருக்கின்றனர். 14 வீரர்கள்தான் அவர்கள். பயிற்சியாளர்கள், உதவிப் பயிற்சியாளர்கள் இவக்ரள்தான் உண்மையான டிராபிக்கள். கோப்பையை அவரிடமிருந்து பெறக்கூடாது என்று முடிவெடுத்தோம், யாரும் இப்படிச் செய் என்று எங்களுக்கு அறிவுறுத்தவில்லை.

    போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திரும்பினர். இந்திய வீரர்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்காக மைதானத்திலேயே இருந்தனர். பரிசளிப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகளும் அங்கு இல்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து பரிசளிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பரிசளிப்பு மேடையில் வைக்கப்பட்டிருந்த ஆசியக் கோப்பை அங்கிருந்து அகற்றப்பட்டது. ஒரு அதிகாரி கோப்பையை எடுத்துச் சென்று விட்டார், ஏன் என்றும் தெரிவிக்கவில்லை.

    இந்திய வீரர்கள் பதக்கங்களைப் பெற்ற போது நக்வியை கண்டு கொள்ளவில்லை, அவரும் இந்திய வீரர்கள் பரிசுகளை வாங்க வரும்போது கரகோஷம் செய்யவில்லை. பாகிஸ்தான் வீரர்களுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு சூர்யகுமார் படை மேடையில் ஏறி கோப்பையைத் தூக்குவது போல் கற்பனைக் கோப்பையைத் தூக்கி மற்ற வீரர்களுடன் கொண்டாடினார்.

    ஆட்டம் முடிந்தவுடன் இத்தனை நாடகம் நடைபெற்றது, அடுத்த சில நாட்களுக்கு இதுதான் பெரிய சர்ச்சையாக இருக்கப் போகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சஹார்: அறிமுகப் போட்டியிலேயே 8 விக்கெட்!

    September 29, 2025
    விளையாட்டு

    பிடிவாதம் பிடித்த பாகிஸ்தான்: வரலாற்றில் முதன்முறையாக டாஸில் 2 தொகுப்பாளர்கள்

    September 29, 2025
    விளையாட்டு

    ‘கைகுலுக்க மறுத்து இந்திய அணி கிரிக்கெட்டை அவமதிக்கிறது’ – பாக். கேப்டன் சல்மான் அலி ஆகா

    September 29, 2025
    விளையாட்டு

    “போட்டி கட்டணத்தை பஹல்காமில் உயிரிழந்தோரின் குடும்பம், ஆயுதப் படைக்கு அளிக்கிறேன்” – சூர்யகுமார்

    September 29, 2025
    விளையாட்டு

    உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: 2-வது தங்கம் வென்றார் அனுஷ்கா

    September 29, 2025
    விளையாட்டு

    உலகின் 5-ம் நிலை வீரரை வீழ்த்தினார் அபய் சிங்

    September 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வக்பு சட்டப் போராட்டம் குறித்து விஎச்பி கவலை: கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அரசிடம் வேண்டுகோள்
    • 166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சஹார்: அறிமுகப் போட்டியிலேயே 8 விக்கெட்!
    • கரூரில் இறந்தோர் பிள்ளைகளின் கல்விச் செலவை எஸ்ஆர்எம் ஏற்கும்: பாரிவேந்தர்
    • சாம்பார் வெங்காயம் விலை சரிவு: கிலோ ரூ.20-க்கு விற்பனை
    • டபுள் கிளாம், டபுள் தி கிரேஸ்: கஜோல் மற்றும் ராணி முகர்ஜியின் துர்கா பூஜா 2025 புடவைகள் நிகழ்ச்சியைத் திருடுகிறார்கள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.