Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரூரில் நடந்திருப்பது வரலாறு காணாத கொடுந்துயரம்: தலைவர்கள், திரையுலகினர் இரங்கல்
    மாநிலம்

    கரூரில் நடந்திருப்பது வரலாறு காணாத கொடுந்துயரம்: தலைவர்கள், திரையுலகினர் இரங்கல்

    adminBy adminSeptember 29, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரூரில் நடந்திருப்பது வரலாறு காணாத கொடுந்துயரம்: தலைவர்கள், திரையுலகினர் இரங்கல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கரூரில் நடந்​திருப்​பது வரலாறு காணாத கொடுந்​துயரம் என்​றும், பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து முழு​மை​யான விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும் எனவும் அச்​சம்​பவத்​துக்கு இரங்​கல் தெரி​வித்த பல்​வேறு அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

    துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டுள்ள செய்​தி​கள் மிகுந்த வேதனை அளிக்​கின்​றன. உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தா​ருக்கு என் ஆழ்ந்த இரங்​கல்​கள்.

    அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: கரூரில் நடை​பெற்ற தவெக கட்​சி​யின் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் 30-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்த செய்தி அதிர்ச்​சி​யை​யும், வேதனையை​யும் தரு​கிறது.

    தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: விஜய் பரப்​புரை கூட்​டத்​தில் நெரிசலால் அப்​பாவி மக்​கள் 40 பேர் உயி​ரிழந்த நிகழ்​வுக்கு இரங்​கலை தெரி​வித்​துக்​கொள்​கிறேன். இதற்கு யார் காரணம் என்​பதை கண்​டறிந்து நடவடிக்கை எடுக்​கவேண்​டும்.

    தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கரூரில் நடந்த அரசி​யல் கூட்​டத்​தில் 30-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்த செய்தி அதிர்ச்​சி​யளிக்​கிறது.

    முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: பிரச்​சா​ரக் கூட்​டத்​துக்கு வரு​வதை குழந்​தைகள், முதி​யோர் தவிர்க்க வேண்​டுமென விஜய் வேண்​டு​கோள் விடுத்த நிலை​யிலும், இது​போன்ற சம்​பவம் நடந்​திருப்​பது வருத்​தமளிக்​கிறது.

    பாமக நிறு​வனர் ராம​தாஸ்: கரூரில் நடந்த கூட்​டநெரிசலில் சிக்கி குழந்​தைகள், பெண்​கள் உட்பட 40-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்த சம்​பவம் அதிர்ச்​சி​யை​யும், வேதனையை​யும் அளிக்​கிறது.

    மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: காவல்​துறை வகுத்த விதி​முறை​கள் பின்​பற்​றப்​ப​டாத​தால் தமிழகத்​தில் வரலாறு காணாத கொடுந்​துயரம் கரூரில் நடந்​திருக்​கிறது.

    திக தலை​வர் கி.வீரமணி: கரூர் மாநகரமே சோக இருளில் மூழ்​கிக் கிடக்​கிறது. ஓர் அரசி​யல் கூட்​டத்​தில் இப்​படியொரு கொடூரம் இது​வரை எங்​கும் நடந்​தி​ராத, கேள்​விப்​ப​டாத அவல​மாகும்.

    விசிக தலைவர் திரு​மாவளவன்: விஜய் பரப்​புரை பயணத்​தில் நடந்த கொடுந்​துயரம் நெஞ்சை பதற வைக்​கிறது.

    தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா: தவெக பரப்​புரை​யில் இந்த அளவுக்கு மக்​கள் உயிர் பலி​யாகி இருப்​பது மிகப்​பெரிய துயர​மான சம்​பவ​மாகும்.

    இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: கரூரில் விஜய் பரப்​புரைக்கு காவல் ​துறை வழங்​கிய இடம் பொருத்​த​மான​தா, கூட்​டம் எந்த அளவுக்கு திரளும் என மதிப்​பிடப்​பட்​டதா என்​பவை பற்றி முழு விசா​ரணை நடத்த வேண்​டும்.

    மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: இந்​தி​யா​வில் இது​வரை அரசி​யல் பிரச்​சார நிகழ்​வின்​போது ஏற்​பட்ட நெரிசலில் இந்த அளவு பெரும் எண்​ணிக்​கை​யில் உயி​ரிழப்பு நிகழ்ந்​த​தில்​லை. அதிர்ச்சி அளிக்​கிறது.

    தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: விஜய் பரப்​புரை​யில் அளவுக்கு அதி​க​மான கூட்​டத்தை அனு​ம​தித்​தது ஏன், என்ன கோட்​பாடு​கள் பின்​பற்றன என்​பது குறித்து உயர்​மட்ட நீதி விசா​ரணை தேவை.

    அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தவெக கூட்​டத்​தில் சிக்கி 30-க்​கும் அதி​க​மானோர் உயி​ரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனை​யும் தரு​கிறது.

    இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசிய தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன்: விஜய் பரப்​புரை கூட்​டத்​தில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் பெரியள​வில் உலுக்கி துயரத்​தில் ஆழ்த்தி இருக்​கிறது.

    தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன்: விஜய் பிரச்​சா​ரத்​துக்கு தாமத​மாக வந்​ததே மக்​கள் அதி​க​மாக கூடியதற்கு காரணம்.

    ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து: பரப்​புரைக் கூட்​டத்​தில் சிக்கி இத்​தனை உயிர்​கள் இழந்​திருப்​பது எவ்​வகை​யிலும் நியாயப்​படுத்த முடி​யாதது.

    முன்​னாள் எம்​.பி. சரத்​கு​மார்: தான் செல்​லும் இடங்​களில் அதி​க​மான கூட்​டம் சேரு​வதை விஜய் பெரு​மை​யாக எண்​ணிக் கொண்​டதே இந்த பெரும் உயிர்​சேதத்​துக்கு முக்​கிய காரணம்.

    இதே​போல் பாமக தலை​வர் அன்​புமணி, தமிழக பாஜக முன்​னாள் தலை​வர்​கள் தமிழிசை, அண்​ணா​மலை, செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத், நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், நடிகர் ரஜினி, முன்​னாள் எம்​.பி. சு.​திரு​நாவுக்​கரசர், கொங்​கு​நாடு மக்​கள் தேசிய கட்சி பொதுச்​செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன், காம​ராஜர் மக்​கள் கட்சி பொதுச்​செய​லா​ளர் பா.குமரய்யா உள்​ளிட்​டோரும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

    நிகழ்ச்​சிகள் தள்ளிவைப்பு: இதற்​கிடையே கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தும் வித​மாக அரசி​யல் கட்​சி​யினர் தங்​களது கட்​சி​யின் நிகழ்ச்​சிகளை தள்ளி வைத்​துள்​ளனர். அதன்​படி திமுக சார்​பில் நேற்று (செப்​.28) நடத்​தப்​பட​விருந்த அனைத்து நிகழ்ச்​சிகளும் ஒத்​திவைக்​கப்​பட்​டன.

    அதே​போல் தரு​மபுரி​யில் நேற்று நடை​பெறவேண்​டிய அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யின் பிரச்​சா​ரம் தள்ளிவைக்​கப்​பட்​டது. தமிழகத்​தில் அடுத்த 2 நாட்​களுக்கு பாஜக சார்​பில் திட்​ட​மிடப்​பட்ட அனைத்து நிகழ்ச்​சிகளும் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. அடுத்த 3 நாட்​களுக்கு துக்​கம் கடைபிடிப்​ப​தோடு, நடக்கவிருந்​த அனைத்​து நிகழ்ச்​சிகளும்​ ரத்​துசெய்​வ​தாக காங்​கிரஸ்​ அறிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூரில் இறந்தோர் பிள்ளைகளின் கல்விச் செலவை எஸ்ஆர்எம் ஏற்கும்: பாரிவேந்தர்

    September 29, 2025
    மாநிலம்

    கரூர் மருத்துவமனையில் சுற்றிச் சுழன்ற தூய்மைப் பணியாளர்கள்!

    September 29, 2025
    மாநிலம்

    விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு மாணவர் சங்கம் போஸ்டர்

    September 29, 2025
    மாநிலம்

    கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

    September 29, 2025
    மாநிலம்

    2 வயது பாலகன் முதல் இளம் ஜோடி வரை: கரூர் துயரில் ஆறுதல்களால் அடங்காத கண்ணீர்!

    September 29, 2025
    மாநிலம்

    கரூர் துயரம்: அரசியல் தலைவர்களின் கேள்விகளும் கருத்துகளும்!

    September 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வக்பு சட்டப் போராட்டம் குறித்து விஎச்பி கவலை: கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அரசிடம் வேண்டுகோள்
    • 166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சஹார்: அறிமுகப் போட்டியிலேயே 8 விக்கெட்!
    • கரூரில் இறந்தோர் பிள்ளைகளின் கல்விச் செலவை எஸ்ஆர்எம் ஏற்கும்: பாரிவேந்தர்
    • சாம்பார் வெங்காயம் விலை சரிவு: கிலோ ரூ.20-க்கு விற்பனை
    • டபுள் கிளாம், டபுள் தி கிரேஸ்: கஜோல் மற்றும் ராணி முகர்ஜியின் துர்கா பூஜா 2025 புடவைகள் நிகழ்ச்சியைத் திருடுகிறார்கள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.