Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசின் பொறுப்பு” – கரூரில் வானதி சீனிவாசன் கருத்து
    மாநிலம்

    “பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசின் பொறுப்பு” – கரூரில் வானதி சீனிவாசன் கருத்து

    adminBy adminSeptember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசின் பொறுப்பு” – கரூரில் வானதி சீனிவாசன் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கரூர்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை கூட திமுக அரசு மறுத்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நலம் விசாரிக்கவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வந்திருந்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இந்தச் சம்பவத்துக்கு யார் மீதும் நாங்கள் பழி சுமத்த விரும்பவில்லை. பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கும், அதை உறுதி செய்வதற்கும் மாநில அரசுதான் பொறுப்பு. அது மாநில அரசின் தார்மிக பொறுப்பாகும். இதுபோல நடப்பது இது முதல் முறை அல்ல. பல சந்தர்ப்பங்களில், பாஜக கூட இதை எதிர்கொண்டுள்ளது. ஏனெனில், கூட்டம் நடத்த மாநில அரசு சரியான இடம் மற்றும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குவதில்லை. அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை கூட திமுக அரசு மறுக்கிறது.

    கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். பாஜக மாநில தலைவர் சொன்னது போலவே உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதி விசாரணை நடத்த வேண்டும். ஏற்கெனவே மாநில அரசு தனிநபர் ஆணையம் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து கரூரில் இருந்து தவெக தலைவர் விஜய், சென்னை சென்றது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “இந்த நேரத்தில் நான் மக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அரசியலில் ஒருவர் படிப்படியாக வளர்ந்து வருவதற்கும், தனது பிரபலத்தின் மூலம் ஒருவர் அடையாளம் காணப்படுவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரபலத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர்களுக்கு மக்கள் எதிர்கொண்டு வரும் நிலை என்ன என்பது தெரியாது. இது அவர்களின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது” என வானதி சீனிவாசன் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூரில் நடந்திருப்பது வரலாறு காணாத கொடுந்துயரம்: தலைவர்கள், திரையுலகினர் இரங்கல்

    September 29, 2025
    மாநிலம்

    விஜய் சுற்றுப்பயணம் தற்காலிகமாக தள்ளிவைப்பு: வீடு, கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

    September 29, 2025
    மாநிலம்

    காலி பாட்டில்களை சேமித்து வைக்க தமிழகம் முழுவதும் 1,500 கடைகளை வாடகைக்கு எடுக்க டாஸ்மாக் திட்டம்

    September 29, 2025
    மாநிலம்

    மத்திய அரசின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் தர வேண்டும்: எல்​.​முருகன் வலியுறுத்தல்

    September 29, 2025
    மாநிலம்

    தவெக தொண்டர்களுக்கு ஆம்புலன்ஸ்களை தாக்கும் மனநிலை ஏற்பட்டதற்கு இபிஎஸ் பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சர்

    September 29, 2025
    மாநிலம்

    ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்க வேண்​டும்: அன்புமணி வலியுறுத்தல்

    September 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போரை நிறுத்த அமைதித் திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா
    • கரூரில் நடந்திருப்பது வரலாறு காணாத கொடுந்துயரம்: தலைவர்கள், திரையுலகினர் இரங்கல்
    • மேற்கு வங்க துர்கா பூஜை பந்தலில் ‘அசுரன்’ வேடத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் சிலை
    • ‘ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்’ – இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து | ஆசிய கோப்பை
    • விஜய் சுற்றுப்பயணம் தற்காலிகமாக தள்ளிவைப்பு: வீடு, கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.