Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விஜய், போலிசார் மீது குற்றம் சொல்வது பிரச்சினையை திசை திருப்பவே உதவும்: திருமாவளவன்
    மாநிலம்

    விஜய், போலிசார் மீது குற்றம் சொல்வது பிரச்சினையை திசை திருப்பவே உதவும்: திருமாவளவன்

    adminBy adminSeptember 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விஜய், போலிசார் மீது குற்றம் சொல்வது பிரச்சினையை திசை திருப்பவே உதவும்: திருமாவளவன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கரூர்: ‘இது கூட்ட நெரிசலில் நடந்த ஒரு துயர சம்பவம். இதனை ஒரு விபத்தாக மட்டுமே சொல்லமுடியும். இதில் யாரும் அரசியல் ஆதாயத்தோடு செயல்படுவதோ, கருத்து சொல்வதோ பொருத்தமானது இல்லை. இதில் அரசியல் விளையாட்டு தேவையில்லை என்பது என் கருத்து’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கரூர் மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் 11 பேரை நேரில் சந்தித்தோம். 65 வயது மதிக்கத்தக்க சுகுணா என்பவர் கவலைக்குரிய நிலையில் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற 10 பேர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார். மேலும் இங்கே சிகிச்சை பெறும் பலரையும் சந்தித்தோம்.

    தமிழகத்தில் எத்தனையோ தலைவர்கள், லட்சக்கணக்கான மக்களை திரட்டி கூட்டம் நடத்தியுள்ளார்கள். அப்போதெல்லாம் நிகழாத ஒன்று, முதல்முறையாக தமிழக அரசியல் வரலாற்றில் நடந்தேறியிருப்பது கவலையளிக்கிறது. இதனை கேள்விப்பட்டவுடனே கரூர் வந்து ஆறுதல் சொல்லியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரின் விரைவான நடவடிக்கை ஆறுதல் அளிப்பதாக உள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிதியுதவியை அதிகப்படுத்தி வழங்க வேண்டும்.

    இது கூட்ட நெரிசலில் நடந்த ஒரு துயர சம்பவம். இதனை ஒரு விபத்தாக மட்டுமே சொல்லமுடியும். இதற்கு உள்நோக்கம் கற்பிக்கின்ற முயற்சி, அரசியல் ஆதாயம் கருதி செய்வதாகவே கருத வேண்டியுள்ளது. இதில் யாரும் அரசியல் ஆதாயத்தோடு செயல்படுவதோ, கருத்து சொல்வதோ பொருத்தமானது இல்லை. விஜய்தான் இதற்கு காரணம் என சொல்வதோ, போலீஸார்தான் காரணம் என சொல்வதோ பிரச்சினைகளை திசை திருப்பவே உதவும். பாதிக்கப்பட்டோருக்கு உதவாது. இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கும் அது உதவாது. இதில் அரசியல் விளையாட்டு தேவையில்லை என்பது என் கருத்து” எனத் தெரிவித்தார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் துயரம் குறித்து சிபிஜ விசாரணை தேவை – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    September 28, 2025
    மாநிலம்

    சனிக்கிழமை கூட்டம் வைத்ததால்தான் இத்தனை பேர் உயிரிழந்தனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

    September 28, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் அக். 4 வரை மழைக்கு வாய்ப்பு

    September 28, 2025
    மாநிலம்

    விஜய் பேசியபோது மின்தடை செய்யப்பட்டதா? – மின்வாரிய தலைமை பொறியாளர் விளக்கம்

    September 28, 2025
    மாநிலம்

    திருவண்ணாமலையில் அண்ணா சிலையை திருடியவர்கள் மீது நடவடிக்கை கோரி அக். 3ல் ஆர்ப்பாட்டம் – அதிமுக

    September 28, 2025
    மாநிலம்

    பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய்யோ, தவெகவினரோ முதலுதவி செய்யவில்லை – சிபிஎம் குற்றச்சாட்டு

    September 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் துயரம் குறித்து சிபிஜ விசாரணை தேவை – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
    • சனிக்கிழமை கூட்டம் வைத்ததால்தான் இத்தனை பேர் உயிரிழந்தனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
    • ஆப்டிகல் மாயை: சீட்டாவின் உருமறைப்பை உங்கள் கண்கள் விஞ்ச முடியுமா? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் அக். 4 வரை மழைக்கு வாய்ப்பு
    • விஜய் பேசியபோது மின்தடை செய்யப்பட்டதா? – மின்வாரிய தலைமை பொறியாளர் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.