Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
    மாநிலம்

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

    adminBy adminSeptember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கரூர்: தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

    கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மா.கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபன்னீர்செல்வம் கூறியது: ”கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தது மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவாக செய்திருக்க வேண்டும். துயரச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்புகளை முறைப்படுத்தி இருக்க வேண்டும்” என்று கூறினார்.

    ஜி.கே.வாசன் கூறியதாவது: இச்சம்பவத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகத்துக்கு தீர்வு காண வேண்டும். இது அரசயில் செய்ய வேண்டிய நேரமில்லை. துயரமான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு அதிகப்படடியான பாதுகாப்புகள் வழங்குபவர்கள். எதிர்க்கட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதில்லை.

    இதுபோன்ற துயரச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நிரந்தரமாக பாதிப்பு இல்லாத வகையில் பொதுக்கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.” என்று கூறினார்.

    மா.கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் கூறியதாவது: விபத்து தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை தாமதப்படுத்தாமல் 2 வாரங்களுக்கு முடித்து உரிய நீதி வழங்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருவண்ணாமலையில் அண்ணா சிலையை திருடியவர்கள் மீது நடவடிக்கை கோரி அக். 3ல் ஆர்ப்பாட்டம் – அதிமுக

    September 28, 2025
    மாநிலம்

    பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய்யோ, தவெகவினரோ முதலுதவி செய்யவில்லை – சிபிஎம் குற்றச்சாட்டு

    September 28, 2025
    மாநிலம்

    விஜய், போலிசார் மீது குற்றம் சொல்வது பிரச்சினையை திசை திருப்பவே உதவும்: திருமாவளவன்

    September 28, 2025
    மாநிலம்

    “விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே காரணம் என்கின்றனர்” – கரூரில் அன்புமணி கருத்து

    September 28, 2025
    மாநிலம்

    கரூர் கூட்ட நெரிசல் பலி 40 ஆக அதிகரிப்பு: நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன?

    September 28, 2025
    மாநிலம்

    “கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத விஜய் எப்படி தலைவராக இருக்க முடியும்?” – நயினார் நாகேந்திரன்

    September 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருவண்ணாமலையில் அண்ணா சிலையை திருடியவர்கள் மீது நடவடிக்கை கோரி அக். 3ல் ஆர்ப்பாட்டம் – அதிமுக
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய்யோ, தவெகவினரோ முதலுதவி செய்யவில்லை – சிபிஎம் குற்றச்சாட்டு
    • இதய நோய் இன்னும் நம்பர் 1 கொலையாளி; ஏன் இரத்த அழுத்தம் மட்டும் குற்றவாளி அல்ல – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன்’ – நடிகர் மம்மூட்டி இரங்கல்
    • விஜய், போலிசார் மீது குற்றம் சொல்வது பிரச்சினையை திசை திருப்பவே உதவும்: திருமாவளவன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.