Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நாட்டை கொள்ளையடிக்கிறது காங்கிரஸ்: ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
    தேசியம்

    நாட்டை கொள்ளையடிக்கிறது காங்கிரஸ்: ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

    adminBy adminSeptember 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாட்டை கொள்ளையடிக்கிறது காங்கிரஸ்: ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜார்சுகுடா: ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்​தார்.

    இந்த விழா​வில் பேசிய பிரதமர் மோடி, ‘காங்​கிரஸ் கட்சி நாட்டை கொள்​ளை​யடிக்​கிறது’ என்று குற்​றம் சாட்டி உள்​ளார். ஒடி​சா​வில் முதல்​வர் மோகன் சரண் மாஜி தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெறுகிறது. அந்த மாநிலத்​தின் ஜார்​சுகுடா நகரில் நேற்று அரசு நலத்​திட்ட விழா நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார்.

    விழா​வில் அவர் பேசி​ய​தாவது: நாடு முழு​வதும் 4 கோடி ஏழை குடும்​பங்​களுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டிக் கொடுக்​கப்​பட்டு உள்​ளன. இந்த திட்​டத்​தில் ஒடி​சா​வில் மட்​டும் 40,000 ஏழை குடும்​பங்​கள் பயன் பெற்​றுள்​ளன. ஒடி​சா​வில் புதி​தாக 2 செமி கண்​டக்​டர் ஆலைகள் அமைக்க மத்​திய அரசு அண்​மை​யில் ஒப்​புதல் வழங்​கியது. இதன்​மூலம் ஒடிசா இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.

    கப்​பல் கட்​டு​மான திட்​டத்​துக்​காக மத்​திய அரசு சார்​பில் அண்​மை​யில் ரூ.70,000 கோடி திட்​டம் அறிவிக்​கப்​பட்​டது. இந்த திட்​டத்​தின் கீழ் ஒடி​சா​வில் கப்​பல் கட்​டு​மான தளம் அமைக்​கப்பட உள்​ளது. இதன்​மூலம் ஏராள​மான இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். மத்​தி​யிலும் நாடு சுதந்​திரம் அடைந்​தது முதல் காங்​கிரஸ் கட்​சி, நாட்டை கொள்​ளை​யடித்து வந்​தது. கடந்த 2014-ம் ஆண்டு மத்​தி​யில் பாஜக ஆட்சி அமைக்க மக்​கள் வாய்ப்பு வழங்​கினர். இதன் மூலம் காங்​கிரஸின் கொள்ளை தடுத்து நிறுத்​தப்​பட்​டது.

    கடந்த காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் அத்​தி​யா​வசிய பொருட்​கள் மீது அதிக வரி விதிக்​கப்​பட்​டது. உதா​ரண​மாக ஒரு குடும்​பத்​தில் ஓராண்​டுக்கு ரூ.1 லட்​சம் செலவு செய்​தால், ரூ.25,000 வரி செலுத்த வேண்​டிய சூழல் இருந்​தது. பாஜக ஆட்​சிக் காலத்​தில் இந்த வரி ரூ.5,000 ஆக குறைந்​திருக்​கிறது. இதன்​மூலம் ஏழை, நடுத்தர வர்க்க மக்​கள் மிகுந்த பலன் அடைந்​துள்​ளனர்.

    காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் மக்​களின் பணம் கொள்​ளை​யடிக்​கப்​படு​கிறது. எனவே காங்​கிரஸ் மற்​றும் அதன் கூட்​டணி கட்​சிகளிடம்​ இருந்​து பொது​ மக்​கள்​ வில​கி இருப்​பது நல்​லது. திருப்பதி, பாலக்காடு உள்ளிட்ட 8 ஐஐடிகளில் ரூ.11,000 கோடி யில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் இந்த ஐஐடிகளில் கூடுதலாக 10,000 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர தெரிவித்தார். இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ரஷ்ய ராணுவத்தில் இருந்து 27 இந்திய வீரர்களை விடுவிக்க வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்

    September 28, 2025
    தேசியம்

    ஐ.நா.வில் ஷெபாஸ் ஷெரீப்புக்கு பதிலடி தந்த இந்திய தூதர் பீட்டல் – யார் இவர்?

    September 28, 2025
    தேசியம்

    இந்தியாவில் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% எட்டியது

    September 28, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தான் உள் பகுதிக்கு மாறிய தீவிரவாதிகள்

    September 28, 2025
    தேசியம்

    தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

    September 28, 2025
    தேசியம்

    ‘அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதயத்தை நொறுக்குகிறது’ – கரூர் சம்பவத்துக்கு ராஜ்நாத் சிங் இரங்கல்

    September 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்
    • மகளின் தின வாழ்த்துக்கள் மற்றும் மேற்கோள்கள்: 85+ தேசிய மகளின் நாள் செய்திகள், வாழ்த்துக்கள், விருப்பங்கள் மற்றும் 2025 க்கான மேற்கோள்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரம்மோற்சவத்தில் இன்று கருடசேவை: திருமலையை வந்தடைந்த ஆண்டாள் சூடிய மாலை
    • கரூர் கூட்ட நெரிசல் | அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு
    • நடைபயிற்சி: இந்த எளிய வாராந்திர பழக்கம் ஒருவரின் உயிரியல் கடிகாரத்தை 7.5 ஆண்டுகள் முன்னிலைப்படுத்தும்! | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.