சினிமாவுக்கு என் முழு பலத்தையும் கொடுப்பேன் என்று கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது நடிகர் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2022-ம் ஆண்டுக்கான நடிகருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் விக்ரம் பிரபு. இந்த விருது வென்றது குறித்து விக்ரம் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2022-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதை தமிழக அரசிடமிருந்து பெறுவதில் நான் பெருமையும், பணிவும் அடைகிறேன்.
இந்த அங்கீகாரத்துக்காக அரசுக்கும், நடுவர் குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் குடும்பத்தினர், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சக ஊழியர்கள், நலம் விரும்பிகள் மற்றும் என் பார்வையாளர்கள் – உங்கள் நிலையான அன்பு மற்றும் ஊக்கத்துக்கு நன்றி. இந்த அங்கீகாரம் எனக்குச் சொந்தமானது போலவே உங்களுக்கும் சொந்தமானது. சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது. நான் தொடர்ந்து அதற்கு என் முழு பலத்தையும் கொடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார் விக்ரம் பிரபு.