புதுடெல்லி: “இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரி ரஷ்யாவை மறைமுகமாக பாதிக்கிறது. உக்ரைன் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்புறுத்தினார்” என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியிருந்தார்.
இதுகுறித்து, வெளியுறவுத்துறை செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருப்பதாவது: உக்ரைன் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்புறுத்தினார் என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது.
பிரதமர் மோடி பற்றி ஊகங்கள் அடிப்படையிலான, கவனக்குறைவான கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோல் அதிபர் புதினிடம், பிரதமர் மோடி பேசவில்லை. நேட்டோ போன்ற புகழ்பெற்ற அமைப்பின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.