Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“அண்ணா மீது இனி ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும்…” – சீமானுக்கு திமுக எச்சரிக்கை
    மாநிலம்

    “அண்ணா மீது இனி ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும்…” – சீமானுக்கு திமுக எச்சரிக்கை

    adminBy adminSeptember 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “அண்ணா மீது இனி ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும்…” – சீமானுக்கு திமுக எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அண்ணா மீது ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும், மானமுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபக் கனலுக்கு ஆளாக நேரிடும் என்று திமுக மாணவர் அணி எச்சரித்துள்ளது.

    இது குறித்து திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தரந்தாழ்த்து வாய்த்துடுக்காகப் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம்; கடும் கண்டனத்துக்கு உரியது.

    1956-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலய தமிழ் மாநாட்டில் நடக்காத விஷயத்தைச் சொல்லி அண்ணாவை பாஜகவின் அண்ணாமலை விமர்சித்தார். அவரின் வழித்தோன்றலாக பாஜகவின் பி டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சீமான், அதே வழியில் அண்ணாவைக் கடும் சொற்களால் விமர்சித்திருக்கிறார்.

    தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்ல உலக அரசியலில் அண்ணா போன்ற இன்னொரு தலைவர் பார்க்க முடியாது. அண்ணா தமிழ்நாட்டின் முதலல்வராக இருந்தவர் என்பது மட்டுமல்ல, ஆல் போல் தழைத்து தமிழ்நாட்டின் அரணாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தவர் என்பது மட்டுமல்ல – திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவர் மட்டுமல்ல – உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவர். தமிழ்த் தாயின் தலைமகன்; தமிழ்நாட்டு மக்களின் உயிரோட்டம். நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி.

    இன்றுவரை அண்ணாவே தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகின்றார். அதன் வெளிப்பாடுதான், அண்ணாவைப் பொறுக்க முடியாமல்தான் ஆத்திரத்தில் வாய் வழியாக வாந்தி எடுத்திருக்கிறார் சீமான். எப்போதும் ஊடக வெளிச்சம் என்ற போதையைத் தேடும், மனப் பிறழ்வும், சுயநலப் பித்தும், ஒழுக்கக்கேடும் கொண்ட ஒருவர் அண்ணாவின் பெயரைக் கூடச் சொல்லத் தகுதியற்றவர். அண்ணாவைப் பற்றி எவரொருவரும் விமர்சிக்கக்கூடத் துணிந்ததில்லை. துணிந்தவர்கள் எல்லாம் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போனார்கள்.

    வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்துவிடும் சீமான், ஊடகத்தினரைச் சந்திக்கும்போதும் சரி, மேடையில் பேசும்போதும் சரி, வரலாற்றைத் திரித்து, பொய்களை அள்ளிவிட்டு, தனக்கு முன் இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணத்திலேயே கதையளக்கும் மனநோயாளியாக மாறி வருகிறார்.

    திராவிட உணர்வை ஊட்டி தமிழ்நாட்டு மக்களைத் தலை நிமிரச் செய்தவர் அண்ணா. அவரது பெருமை சீமான் போன்ற தற்குறிகளுக்கு எப்படித் தெரியும்? தமிழ்நாட்டில் தற்போது ஒரு மோசமான அரசியல் உருவாகிக் கொண்டிருக்கிறது. கூட்டம் கூடினால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று சில அரசியல் அரைவேக்காடுகள் நினைத்துக் கொள்கின்றன.

    இன்றைக்குத் தமிழ்நாடும் தமிழர்களும் அடைந்துள்ள வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவை அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகள்தான். சாமனியன் உயர, தலை நிமிர வைத்த அண்ணாவைப் பழிப்பது சாமானிய மக்களைப் பழிப்பதற்குச் சமம்.

    ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் மீதும் தமிழ்மொழியின் மீதும் சுமத்தப்பட்டிருந்த ஆதிக்கத்தை அடித்து நொறுக்கி தமிழர்களின் தன்மானத்தை உயர்த்திப் பிடித்த அண்ணாவை இழிவுபடுத்துவது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் இழிவுபடுத்துவதற்கு ஒப்பாகும்.

    அண்ணாவை தமிழர்கள் எந்த அளவுக்கு நேசித்தார்கள் என்பதற்கு அவரின் மறைவுக்குக் கடல்போல் கூடிய தமிழர்களின் பெருங்கூட்டமே சாட்சி. சீமான் மனிதர்களோடு பேசவே அருகதை அற்றவர். மாடுகளுடன் மரங்களுடனும் மலைகளுடன் பேசிக் கொண்டிருக்கும் மன நோயாளிகளுக்கு மனிதர்களிடம் பேசவே தெரியாது.

    நாக்கை வைத்து அரசியல்தான் நடத்துவார்கள். ஆனால், சீமானோ அந்த நாக்கை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். பிரபாகனுடன் இருக்கும் புகைப்படம், ஈழத்தில் துப்பாக்கி பயிற்சி, ‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை’ திருக்குறளுக்கு பொய்யுரை, காமராஜர் கட்டிய பள்ளியில் அப்துல் கலாம் எனச் சீமான் சொன்ன பொய்கள் எத்தனை எத்தனை?

    கோயாபல்ஸ் கூட சீமானிடம் தோற்றுப் போய் நிற்பான். அண்ணா மீது இனி ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும், மானமுள்ள தமிழ்நாட்டு மக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் கோபக் கனலுக்கு ஆளாக நேரிடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காங்., திமுக புதுச்சேரிக்கு ஆபத்தான வைரஸ்: பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் விமர்சனம்

    September 27, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அக்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு

    September 27, 2025
    மாநிலம்

    தவெக கொடிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் விஜய் பதிலளிக்க உத்தரவு

    September 27, 2025
    மாநிலம்

    ‘பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் உள்ள திமுகவிடம் ஜாக்கிரதை’ – நாமக்கல்லில் விஜய் பேச்சு

    September 27, 2025
    மாநிலம்

    வைக்கம் அறூகுட்டி சிறையில் ரூ.4 கோடியில் பெரியார் நினைவகம்: அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்

    September 27, 2025
    மாநிலம்

    புதிய வக்பு திருத்தச் சட்டத்தின் படி வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது: அமைச்சர் நாசர்

    September 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காங்., திமுக புதுச்சேரிக்கு ஆபத்தான வைரஸ்: பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் விமர்சனம்
    • கண்டங்கள் மற்றும் உணவு வகைகள் முழுவதும் மிளகாய் பெப்பர்ஸின் காரமான பயணம்: மெக்ஸிகோ முதல் உலகளாவிய சமையலறைகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
    • பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்: ஜெய்சங்கர்
    • வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அக்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.