சென்னை: ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளை சார்பில் சர்வதேச பிக்கிள்பால் போட்டி சென்னை விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட்டில் நேற்று தொடங்கியது.
3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை இந்தியா பிக்கிள்பால் கூட்டமைப்பு, தமிழ்நாடு பிக்கிள்பால் சங்கம், டைனமிக் யுனிவர்செல் பிக்கிள்பால் ரேட்டிங், பிக்கிள்பால் உலக ரேங்கிங் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
போட்டியின் தொடக்க நாளான நேற்று ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் பிரஜ்னேஷ் குணேஷ்வரன், வெங்கடேஷ் நாகராஜன் ஜோடி 12-8 என்ற கணக்கில் பிரணவ் டோய்போட், உத்சவ் சர்வய்யா ஜோடியை வீழ்த்தியது. மகளிர் இரட்டையர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, நிரந்தரா முத்தையா ஜோடி 15-3 என்ற கணக்கில் சிருஷ்டி, ஜெயபிரியா ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.