Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா | ஆசிய கோப்பை
    விளையாட்டு

    சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா | ஆசிய கோப்பை

    adminBy adminSeptember 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா | ஆசிய கோப்பை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த சூழலில் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் இன்று துபாயில் நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ஷுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் வெளியேறினார்.

    மறுமுனையில் அபிஷேக் சர்மா வழக்கம் போலவே பேட்டிங்கில் அதிரடி காட்டினார். அவர் 31 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இணைந்து 66 ரன்கள் எடுத்தனர். சஞ்சு சாம்சன், 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா, 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பதும் நிசங்கா 58 பந்துகளில் 108 ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் ஓப்பனிங் இறங்கிய குசால் மெண்டிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த குசால் பெரேரா நிசங்காவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி காட்டினார். 58 ரன்கள் குவித்த அவர் 12வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

    கடைசி ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறைப்படி இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் தட்டுத் தடுமாறி இரண்டு விக்கெட்களுக்கு இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. 3 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாவத் முதல் பந்திலேயே 3 ரன்களை எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி | ஆசிய கோப்பை

    September 26, 2025
    விளையாட்டு

    “கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” – பாகிஸ்தான் பயிற்சியாளர் ஹெசன் கருத்து

    September 26, 2025
    விளையாட்டு

    பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்த கருத்து: சூர்யகுமாருக்கு 30% அபராதம்

    September 26, 2025
    விளையாட்டு

    ‘பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள்’ – வருண் சக்ரவர்த்தி பகிர்வு

    September 26, 2025
    விளையாட்டு

    மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு திரும்பினார் ஜஸ்பிரீத் பும்ரா

    September 26, 2025
    விளையாட்டு

    ‘இந்திய மைதானங்களில் மக்களின் ஆரவாரம் சிறப்பானது’ – ஸ்மிருதி மந்தனா சிலாகிப்பு

    September 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இணையதள வழிகாட்டி மதிப்புக்கேற்ப பத்திரப் பதிவு கட்டணம் நிர்ணயம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
    • வன்னியருக்கு 10.5% ஒதுக்கீட்டை வலியுறுத்தி டிச.5-ம் தேதி பாமக ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
    • முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு 
    • காபி சுவாசத்திற்கு விடைபெறுங்கள்: உங்கள் சுவாசத்தை புதியதாக வைத்திருக்க இயற்கை வழிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உள்ளடி வேலை செஞ்சா ஓரங்கட்டிருவோம் பாத்துக்கோங்க..! – ஏலகிரியில் எ.வ.வேலு அடித்த எச்சரிக்கை மணி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.