Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘மத்திய அரசு மிரட்டி அடிபணிய வைக்க முடியாது’ – கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு வாதம்
    மாநிலம்

    ‘மத்திய அரசு மிரட்டி அடிபணிய வைக்க முடியாது’ – கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு வாதம்

    adminBy adminSeptember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘மத்திய அரசு மிரட்டி அடிபணிய வைக்க முடியாது’ – கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு வாதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி கொடுப்போம் என மத்திய அரசு எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் காரசாரமாக வாதிடப்பட்டது.

    கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல், குறைவான தொகையை மட்டுமே தமிழக அரசு தங்களுக்கு வழங்குவதாகக்கூறி தனியார் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 2024- 25ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தையும் 2025- 26ம் கல்வி ஆண்டுக்கு மாற்றியமைக்கப்பட்ட, உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தையும் தனியார் பள்ளிகளுக்கு வழங்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தங்களுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை முறையாக வழங்கவில்லை எனக் கூறி தனியார் பள்ளிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி உரிய தொகை வழங்கப்படவில்லை என்றார். அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் கொடுக்க வேண்டும். ஆனால் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மத்திய அரசின் பங்களிப்பு தொகையை வழங்குவோம் என மத்திய அரசு பிடிவாதம் செய்து வருவதாக தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் நிதி கிடைக்குமே என்றார். அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் நிதி கொடுப்போம் என மத்திய அரசு எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. தமிழக அரசும் ஒருபோதும் அடிபணியாது. இதுதொடர்பாக உரிய பதில்மனு தாக்கல் செய்யப்படும்” என காரசாரமாக தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் அக்.24-க்கு தள்ளி வைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாடநூல் கழகம் சார்பில் 26 நூல்கள் வெளியிட்டார் ஸ்டாலின்: ரூ.39 கோடியில் 146 நூலக கட்டிடங்கள் திறப்பு

    September 27, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

    September 27, 2025
    மாநிலம்

    புதிதாக கட்டுவதற்காக செங்கோட்டையில் 150 ஆண்டு பழமையான ‘ஆர்ச்’ இடிப்பு!

    September 26, 2025
    மாநிலம்

    இளையராஜா பாடல் விவகாரம்: சோனி நிறுவனம் விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    September 26, 2025
    மாநிலம்

    விவசாயிகளுக்கு கொடுத்த 56 வாக்குறுதிகளில் 8 மட்டுமே நிறைவேற்றம்: திமுகவை சாடிய அன்புமணி

    September 26, 2025
    மாநிலம்

    “நீங்கள் ஒரு படத்தை இயக்கி இருக்கிறீர்கள்…. கல்விதான் காரணமா?” – தமிழரசன் பச்சமுத்துவுக்கு சீமான் கேள்வி

    September 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா | ஆசிய கோப்பை
    • முதல் நாளில் ரூ.150 கோடி வசூலை கடந்து ‘ஓஜி’ சாதனை
    • பாடநூல் கழகம் சார்பில் 26 நூல்கள் வெளியிட்டார் ஸ்டாலின்: ரூ.39 கோடியில் 146 நூலக கட்டிடங்கள் திறப்பு
    • அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அடுத்த தாக்குதல்: இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி – முழு விவரம்
    • உ.பி. அறுவை சிகிச்சை நிபுணர்கள் மனிதனின் வயிற்றில் இருந்து 50 பொருட்களை அகற்றினர்: அவர் ஏன் கரண்டி, பல் துலக்குதல் மற்றும் பேனாக்களை விழுங்கினார்? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.